செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

2 ஆறுகளில் வெள்ளம்.. தத்தளிக்கும் கடலூர்..!

Nov 20, 2021 05:06:10 PM

கடலூரில் தென்பெண்ணை, கெடிலம் ஆகிய இரண்டு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல சாலைகளும் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி அணையில் இருந்தும், ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணையில் இருந்தும் திறந்துவிடப்பட்டுள்ள நீர் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது.

119 அடி உயரமுள்ள சாத்தனூர் அணையில் மதகுகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அணையின் நீர்மட்டம் 99 அடியாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அணைக்கு வரும் 56 ஆயிரம் கன அடி நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கன மழை பெய்ததாலும் தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது. ஆற்றின் இருகரைகளிலும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தென்பெண்ணையின் கழிமுகப் பகுதியான கடலூரில் ஒரு இலட்சம் கன அடிக்கும் அதிகமாக வெள்ளம் பாய்வதால் நகரின் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றன. ஐம்பதுக்கு மேற்பட்ட ஊராட்சிப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

கடலூரையும் புதுச்சேரியையும் இணைக்கும் பெரிய கங்கணாங்குப்பத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை, மருதாடு, நெல்லிக்குப்பம் சாலைகள் ஆகியவற்றில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்தத் தடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் அறைகலன்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், மின்கருவிகள், மின்னணுக் கருவிகள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களைப் படகுகள் மூலம் மீட்கும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

 

கடலூரின் வடபுறம் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப் பாதிப்பு என்றால், தென்புறத்தில் கெடிலம் ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரமுள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன.

 


Advertisement
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement