செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நீர்வரத்து அதிகரிப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!

Nov 20, 2021 06:19:19 PM

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 23 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றில் அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதால், சென்னை மணலிபுதுநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக மணலி, மணலி புதுநகர், சடையன் குப்பம், மகாலட்சுமி நகர், இருளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து, அங்கிருந்த 300க்கும் அதிகமான குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, பூண்டி சத்தியமூர்த்தி நீர்க்தேக்கத்திற்கு 24 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து தற்போது 23 ஆயிரத்து 500 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நேற்று இரவு நிலவரப்படி 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது நீர்வரத்து குறைந்திருப்பதால் நீர்திறப்பும் குறைக்கப்பட்டு வருகிறது.

கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை நரப்பாளையம் பாலத்தில் இருந்தவாறு பொது மக்கள் செல்பி மற்றும் வீடியோ எடுத்து வருகின்றனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement