செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சிறுவர் ஆபாச வீடியோ வியாபாரம் -77 இடங்களில் சிபிஐ சோதனை

Nov 17, 2021 03:49:48 PM

சிறுவர்களின் ஆபாச வீடியோக்களைப் பகிர்ந்த விவகாரத்தில்,  தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களில் 77 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 100க்கும் மேற்பட்டோர் இதில் சிக்கியுள்ளதால் சி.பி.ஐ. விசாரணை தீவிரமடைந்துள்ளது. 

சிறுவர் சிறுமிகளை ஆபாசப் படம் எடுத்து இணையவெளிகளில் பரப்பும் கும்பல் குறித்த இன்டர்போல் தகவலையடுத்து குழந்தைகள் தினமான நவம்பர் 14 ஆம் தேதி முதல் 400க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பாகிஸ்தான், இலங்கை, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து , சவூதி அரேபியா , எகிப்து, போன்ற நாடுகளில் இயங்கும் 50 குழுக்கள் மூலமாக சமூக ஊடகங்களிலும் மொபைல்களிலும் சிறுவர் ஆபாச வீடியோக்கள் உலகம் முழுவதும் பகிரப்படுவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 77 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த, பரப்பியவர்களை சிறைப்பிடித்தனர். 100க்கும் மேற்பட்டோர் சிக்கிய போதும் 10 பேரை இதுவரை கைது செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஆன்லைனில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வீடியோக்களை வியாபாரம் செய்வது தொடர்பாக 6பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளர் வீட்டில் 10 மணிநேரமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் CBI அதிகாரிகள் 12 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிடச் சென்ற போது கிராம மக்கள் சிபிஐ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து சென்ற போலீசார் தலையிட்டு சிபிஐ அதிகாரிகளை பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.

டெல்லி, திருப்பதி, அஜ்மீர், ஜெய்ப்பூர் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களிலும் சோதனைகள் இன்றும் தொடர்ந்து நடைபெறுவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆபாச வீடியோக்களை பகிர்ந்த லேப்டாப்கள், மொபைல் போன்கள் , கணினிகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement