கேரளாவில் நோரோ வைரஸ் பரவுவதால் தமிழ்நாடு - கேரள எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அந்த வைரஸ் விலங்குகளில் இருந்து பரவும் நிலையில், அதற்கான மருந்துகள் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் 5,000 மருத்துவ முகாம்களை சென்னை ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைக்காலத்தில் உடல்நலக் குறைவு ஏற்படுவதில் இருந்து இருந்து மக்களை காக்க நடத்தப்படும் இந்த முகாம்களில், கொரோனா சிகிச்சையும், தடுப்பூசியும் செலுத்தப்படும் என குறிப்பிட்டார்.