செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் நேரில் ஆய்வு

Nov 13, 2021 07:38:47 PM

டெல்டா மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கழனிகளில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட உழவர் பெருமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ராஜாகுப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், அவர்களுக்கு 10 கிலோ அரிசி, 5 கிலோ மளிகைப் பொருட்கள், வேட்டி, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

தொடர்ந்து, மாருதி நகரில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த 18 குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் வசிப்பதற்கான இலவச நிரந்தர வீட்டு மனை பட்டாக்களையும் முதலமைச்சர் வழங்கினார். ஆடூர்அகரம் பகுதிக்குச் சென்ற முதலமைச்சர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு, அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் புத்தூர் கிராமத்தில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டலின் நேரில் பார்வையிட்டு, விவசாயிகள், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கனமழையால் மாவட்டம் முழுவதும் சுமார் 13ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தரங்கம்பாடி அருகேமழை நீரால் சூழ்ந்து பாதிக்கப்பட்ட கேசவன் பாளையம் சுனாமி குடியிருப்பை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். 

நாகை மாவட்டம் கருங்கன்னி, அருந்தவம்புலம் ஆகிய இடங்களில் விளைநிலங்களை பார்வையிட்ட முதலமைச்சரிடம், விவசாயிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை எடுத்து காண்பித்தனர். மேலும், கனமழை காரணமாக வீடுகளை இழந்த பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். நாகை மாவட்டத்தில் மொத்தம் 25ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார்.

டெல்டா மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும், பயிர்களுக்கு இழப்பீடும் வழங்கப்படும் என உறுதியளித்தார். 

கடலூர் மாவட்டத்தில் ராஜாகுப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், அவர்களுக்கு 10 கிலோ அரிசி, 5 கிலோ மளிகைப் பொருட்கள், வேட்டி, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கி, ஆடூர்அகரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டார். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தூர் கிராமத்தில் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை பார்வையிட்டதோடு, கேசவன் பாளையம் சுனாமி குடியிருப்பிலும் ஆய்வு செய்தார்.

நாகை மாவட்டம் கருங்கன்னி, அருந்தவம்புலம் ஆகிய இடங்களில் விளைநிலங்களை பார்வையிட்ட முதலமைச்சரிடம், விவசாயிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை எடுத்து காண்பித்தனர். 

தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுவதோடு, பயிர்களுக்கு இழப்பீடும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

 

 


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement