செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொரோனா காலத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் இனி வழக்கமான ரயில்களாக இயக்கப்படும் ; ரயில்வே அமைச்சகம்

Nov 13, 2021 05:20:25 PM

கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்ட அனைத்து ரயில்களும், இன்று முதல் வழக்கமான ரயில்களாக இயக்கப்படும் என்று, ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான கூடுதல் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கமான ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர், கடந்த ஆண்டு மே 12ந் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

20 மாதங்கள் கடந்த நிலையில், சிறப்பு ரயில்கள் என்ற அடையாளம் நீக்கப்பட்டு, கொரோனாவுக்கு முந்தைய நிலவரப்படி வழக்கமான ரயில் தடங்களில் ரயில்கள் இயங்கும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால், சிறப்பு ரயில்களுக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணங்கள் குறைக்கப்படுகின்றன.
பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில் வே அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதை உடனடியாக அமல்படுத்தும்படி மண்டல ரயில் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அது நடைமுறைப்படுத்த ஓரிரு நாள் ஆகலாம் என்றும் ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதனால், சிறப்பு ரயில்கள் மற்றும் விடுமுறைக்கால ரயில்கள் என்ற அடையாளம் 1700க்கும் மேற்பட்ட ரயில்களில் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்ட சாதாரண கட்டணத்திலான முன்பதிவு இல்லாத பாஸஞ்சர் பயணிகள் ரயில்களும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பழனி-மதுரை, கோவை பொள்ளாச்சி , தூத்துக்குடி -திருச்செந்தூர் திருநெல்வேலி உள்ளிட்ட வழித்தடங்களில் பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement