செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஆறு, ஏரிகளை நிரப்பிய கனமழை... குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீர்

Nov 12, 2021 09:11:06 PM

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி, வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது.

பாலாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாகப் பெய்த மழையில் ஏரிகள், குளங்கள் அவற்றின் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

பாலாற்றில் 25 ஆயிரம் கன அடி தண்ணீரும் செய்யாற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டுள்ளதால், இருகரைகளையும் தொட்டு வெள்ளம் பாய்ந்து செல்கிறது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 635 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தென்னேரி முழு கொள்ளளவான 18 அடியை எட்டி உபரிநீர் கலங்கல் வழியாக வெளியேறி வருகிறது.

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியிலுள்ள பாலாற்றின் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ள நீர் செல்வதால் வாலாஜாபாத் - இளையனார்வேலூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் இளையனார்வேலூர், அவலூர், தம்மனூர், உத்திரமேரூர், திருப்புலிவனம், சாலவாக்கம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்க மக்கள் 10 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை நிலை உருவாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜபுரம் பகுதி கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து குட்டித் தீவு போல காட்சியளிக்கிறது. இடுப்பளவு தண்ணீரில் சிக்கியவர்களை ரப்பர் படகுகள் மூலம் பேரிடர் மீட்பு வீரர்கள் மீட்டு, நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மற்றொரு மிகப்பெரிய ஏரியான மணிமங்கலம் எரியும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் எரியும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

உபரி நீர் செல்லக்கூடிய கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெளியேற வழியின்றி தாம்பரம் சோமங்கலம் செல்லக்கூடிய பிரதான சாலையில் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement