செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தொடர் மழை எதிரொலி ; திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு

Nov 12, 2021 02:09:06 PM

பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்காலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணை நிரம்பியதால் அதில் இருந்து நேற்றிரவு முதல் கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் முத்துக்கொண்டாபுரம் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. தரைப்பாலத்தைக் கடக்க வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் திருத்தணி அருகே வெங்கடாபுரத்தில் உள்ள தரைப் பாலம் மூழ்கியுள்ளது. பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பத்துக்கு மேற்பட்ட ஊர்களுக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

 திருவாலங்காடு அருகே கனகம்மாசத்திரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. தரைத்தளத்தில் உள்ள வகுப்பறைகளுக்குள்ளும் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியுள்ளது.

 பூண்டி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து நொடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 35 அடி உயரமுள்ள பூண்டி ஏரியில் 34 அடிக்குத் தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக 15 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது

பூண்டி ஏரியில் இருந்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒதப்பை பாலம் மூழ்கும் நிலையில் உள்ளது. இதனால் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை இடையே வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைத்துக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 பிச்சாட்டூர் அணையில் இருந்து நொடிக்கு மூவாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊத்துக்கோட்டையில் உள்ள தரைப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. புதிதாகக் கட்டப்படும் மேம்பாலத்தில் 80 விழுக்காடு பணிகள் முடிந்துள்ள நிலையில் அதில் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

 


Advertisement
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement