செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

"நீங்க யாரை வேணும்னாலும் கூப்பிடுங்க" ... போலீசாரை வெறுப்பேற்றிய போதை ஆசாமி

Nov 08, 2021 09:27:08 AM

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று பெட்ரோல் பங்க் இயந்திரத்தின் மீது மோதி சேதப்படுதிய நபர் ஒருவர், போலீசாரிடம் அலப்பறை செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்ற அந்த நபர், தீபாவளியன்று மூக்குமுட்ட குடித்துவிட்டு தனது மாருதி ஸ்விப்ட் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

போதையில் ஓட்டிச் சென்ற கார் நிலை தடுமாறி அங்கிருந்த பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் நிரப்பும் இயந்திரத்தின் மீது மோதி, அது கீழே விழுந்து சேதமடைந்துள்ளது. விடுமுறை தினம் என்பதால் இயந்திரம் செயல்படாத நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

காலில் காயத்துடன் அங்கிருந்த ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற மோகன் ராஜை பரிசோதித்த மருத்துவர், உள் காயமாக இருப்பதால் காரைக்குடி அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்து, அங்கிருந்து மருத்துவர்களை வரவழைத்து, தனக்கு இங்கேயே சிகிச்சை அளிக்குமாறு மோகன்ராஜ் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டு அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பங்க் தரப்பிலிருந்து அதுவரை புகார் வராததால் மோகன் ராஜிடம் பொறுமையாகப் பேசி காரைக்குடி செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கும் மறுப்பு தெரிவித்த மோகன்ராஜ், தாம் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி என்றும் வேறு எங்கும் செல்ல முடியாது, இங்கேயே மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளியுங்கள் என்றும் வாக்குவாதம் செய்தார்.

ஒரு கட்டத்தில் தம்மை போலீசார்தான் மனிதாபிமானத்தோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்று அவர்கள் பக்கமே புகார் வண்டியை திருப்பினார் மோகன்ராஜ்.

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு தொல்லை ஏற்படக்கூடாது என்பதற்காக போலீசார் பல மணி நேரமாக அவருடன் பொறுமையாகப் பேசி அங்கிருந்து காரைக்குடி அனுப்பி வைக்கப்பார்த்தனர்.

ஆனால் டி.எஸ்.பி அல்லது எஸ்.பி என யார் வேண்டுமானாலும் வரட்டும் தாம் எங்கும் செல்ல முடியாது என அடம்பிடித்த மோகன்ராஜ், ஒரு கட்டத்தில் போலீசாரை அவதூறாகப் பேசத் தொடங்கினார்.

இந்த சம்பவம் தீபாவளி அன்று நிகழ்ந்த நிலையில் பங்க் உரிமையாளர் தரப்பில் தாமதமாகப் புகாரளிக்கப்பட்டதால், மோகன் ராஜ் மீது தாமதமாகவே வழக்குப்பதிவு செய்ய முடிந்தது. பங்க் தரப்பில் தம் மீது புகாரளிக்க உள்ளதை அறிந்த மோகன்ராஜ், தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement