செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அலட்சியப்படுத்த வேண்டாம்.. ஆபத்தில் சிக்க வேண்டாம்.. எச்சரிக்கும் தீயணைப்புத்துறை..!

Nov 05, 2021 08:30:56 PM

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அருவியில் குளிக்கச் சென்று திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 50க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.

செங்கம் அடுத்த குப்பநத்தம் துரிஞ்சாபுரம் அருகே வனப்பகுதியில் "நாமக்கல் நீர்வீழ்ச்சி" என்ற பெயரில் சிறிய அருவிப் பகுதி உள்ளது. விடுமுறை தினங்களில் சுற்றுவட்டார மக்கள் இங்கு வந்து பொழுது போக்குவது வழக்கம்.

தீபாவளி விடுமுறை என்பதால், குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு சென்றுள்ளனர். மதியம் திடீரென காட்டுப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு தொடர் கனமழை பெய்துள்ளது.

இதில் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 50க்கும் மேற்பட்டோர் மறு கரைக்கு வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர்.

கயிறு ஒன்றைக் கட்டி, பெரும் போராட்டத்துக்குப் பின் அவர்கள் சுற்றுலாப் பயணிகளை மீட்டனர். மீட்புப் பணியின்போது இளைஞர் ஒருவரின் கால் வழுக்கி மீட்புப் படை வீரரோடு சேர்ந்து கீழே விழுந்தார்.

தமிழகம் முழுவதுமே வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆறுகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. நீர்வரத்தின் அளவு எந்த நேரத்தில் அதிகரிக்கும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளதால், அதுபோன்ற பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை என பல்வேறு தரப்புகளில் இருந்தும் எச்சரிக்கைகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.

ஆனாலும் ஒரு சிலர் செய்யும் அலட்சியத்தால் உயிரிழப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது என்றும் எனவே எச்சரிக்கையாக இருக்குமாறும் அரசு அதிகாரிகள், போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement