செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

போலி தங்கக்காசு கொடுத்து மோசடி.. "போலீஸை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்"

Nov 04, 2021 01:17:17 PM

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே போலி தங்கக்காசுகளைக் கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், வழக்கறிஞர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவர் தீபாவளிக்காக தங்கக்காசு ஏலச்சீட்டு நடத்தி வந்தார். தீபாவளி நெருங்கியதால் குறைந்த விலையில் தங்க காசுகள் வாங்குவதற்காக, சேலத்திலுள்ள இடைத்தரகர்களிடம் போனில் பேசியுள்ளார். சிறிது நேரத்தில் பெரியசாமி என்பவன் போனில் அழைத்து கிராமுக்கு 300 ரூபாய் குறைவாக தங்கக்காசு தருகிறேன் எனக் கூறி ஓமலூர் வருமாறு கூறியுள்ளான்.

அதனை நம்பி 15 லட்ச ரூபாய் பணத்தோடு ஓமலூர் வந்த பழனியிடம் பெரியசாமி, அவனது மகன் ஜகன், மருமகன் பரணீதரன் ஆகியோர் தங்கக்காசுகளைக் கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுள்ளனர்.

பழனி அந்த தங்கக்காசுகளை சோதித்துக் கொண்டிருக்கும்போதே அங்கு வந்த 2 பேர், தங்களை போலீசார் எனக் கூறி, பணத்தை காவல் நிலையம் வந்து வாங்கிச் செல்லுமாறு பறித்துக்கொண்டு வேகமாகச் செல்ல முயன்றுள்ளனர்.

அவர்களோடு சேர்ந்து பெரியசாமி கும்பலும் தப்பிச் சென்றதும் சந்தேகமடைந்த பழனி, அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றுள்ளார். அதில் உதவி ஆய்வாளர் எனக் கூறியவனை மட்டும் பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் பழனி.

விசாரணையில் அந்த நபர் கொண்டலாம்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் என்பது தெரியவந்தது. அவன் மூலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் விஜயகுமார் என்பவனையும் பெரியசாமி கும்பலையும் போலீசார் கைது செய்தனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணனும் அவனது நண்பனான வழக்கறிஞர் விஜயகுமாரும் சேர்ந்து போலி தங்கக்காசுகளை கொடுத்து மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 6 பேர் மீதும் மோசடி, பணம் பறிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, போலி தங்கக்காசுகளைக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள கொண்டலாம்பட்டி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணனை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement