செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு

Oct 27, 2021 04:36:36 PM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்திற்கு 90ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் 7.816லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடப்பு இராபி பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களான சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், கரும்பு, பருத்தி ஆகியவை உட்பட மொத்தமாக 24.829லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப் படுவதாகவும், இதன் காரணமாக யூரியா மற்றும் டி.ஏ.பி. உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவை அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விவசாய பணிகளுக்கு தட்டுப்பாடின்றி மானிய உரங்கள் கிடைக்க வழிவகை செய்திடவும், தமிழகத்தின் உரத்தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மத்திய ரசாயனத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதில், யூரியாவை உரிய காலத்தில் வழங்கிடவும், 20ஆயிரம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 10ஆயிரம் மெட்ரிக் டன் பொட்டாஷ் உரத்தை கூடுதலாக ஒதுக்கீடு செய்யவும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று காரைக்கால் துறைமுகத்திற்கு வரவுள்ள 90ஆயிரம் மெட்ரிக் டன் இறக்குமதி யூரியாவை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் தனியார் மற்றும் சில்லறை உர விற்பனை நிலையங்களில் 64,111 மெட்ரிக் டன் யூரியாவும், 23,654மெட்ரிக் டன் டி.ஏ.பி.யும், 35,590 மெட்ரிக் டன் பொட்டாஷும், 1,17,575 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரமும் கையிருப்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
திருப்பூரில் பட்டாசு தயாரிக்கும்போது நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 3 பலியான சம்பவத்தில் 2 கைது
திருச்சூர் அருகே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுச் சுவரில் மோதி விபத்து
பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு
கன்னியாகுமரி மதுபோதையில் பாடம் நடத்திய தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம்
திருப்பூரில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகளை தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
லஞ்ச ஒழிப்பு ஆய்வாளருக்கே ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம்
டெங்குவால் 7பேர் உயிரிழப்பு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தலைவாசல் அருகே புலித்தோல் விற்க முயன்ற மூவர் கைது - வனத்துறையினர் விசாரணை
கே.ஆர்.பி. அணையிலிருந்து விநாடிக்கு 178 கன அடி வீதம் நீர் வெளியேற்றம்.. தொடர் மழையால் முழுக்கொள்ளளவை எட்டவுள்ள அணை..

Advertisement
Posted Oct 09, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு

Posted Oct 09, 2024 in சென்னை,Big Stories,

fake ப்ரியாவை நம்பி ஏமாந்த அந்த 200 பேர் ரூ 2,00,000 போச்சிப்பா..! என்னம்மா.. இப்படி பன்றீங்களேம்மா...

Posted Oct 09, 2024 in இந்தியா,Big Stories,

ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பள்ளத்தாக்கில் சரிந்த காங்கிரஸ் 2வது பெரிய கட்சியான பா.ஜ.க காஷ்மீர் ஆப்பிளை ருசிக்கத் தவறிய காங்கிரஸ் ஜம்முவில் மீண்டும் சாதித்த பா.ஜ.க

Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!


Advertisement