செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சென்னையில் போக்குவரத்து காவலர்கள் மீது டேங்கர் லாரி உரிமையாளர்கள் புகார்!

Oct 22, 2021 04:04:27 PM

சென்னை மாநகரின் பிரதான சாலைகள் வழியாக குறிப்பிட்ட நிறுவனத்தின் டேங்கர் லாரிகளை மட்டும் போக்குவரத்து காவலர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதிப்பதாக சமையல் எண்ணெய் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சென்னை காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

சென்னை துறைமுகத்திற்கு செல்லும் டேங்கர் லாரிகள் மற்றும் கண்டெய்னர் வாகனங்கள், விரைவு சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறையின் உத்தரவு அமலில் உள்ளது. அதிலும், கனரக வாகனங்கள் செல்வதற்கான வழியில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற விதிகளை மீறி, இலகுரக வாகனங்கள் செல்லும் வழியிலும் லஞ்சம் பெற்றுக் கொண்டு போக்குவரத்து காவல் துறையினர் அனுமதிப்பதாக நீண்டகால குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த நிலையில், குறிப்பிட்ட நிறுவனத்தின் டேங்கர் லாரிகள் மட்டும் விதிகளை மீறி நகரின் முக்கிய சாலைகள் வழியாக அனுமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மேடவாக்கத்தில் பிரபல சமையல் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து மாதத்திற்கு 20 ஆயிரம் டன் சமையல் எண்ணெய் சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தின் சமையல் எண்ணெய் துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் சுமார் 30 டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

அவ்வாறு கொண்டு வரப்படும் சமையல் எண்ணெய் டேங்கர் லாரிகள் விதிகளை மீறி அண்ணா சாலை வழியாகவும், காமராஜர் சாலை வழியாகவும் துறைமுகப் பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பொதுவாக கனரக வாகனங்கள் காலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை சென்னை நகருக்குள் வரக்கூடாது என்ற உத்தரவு உள்ளது.

இந்த குறிப்பிட்ட டேங்கர் லாரிகள் மட்டும் தினமும் போக்குவரத்து அதிகமாக காணப்படும் நேரத்திலேயே மேடவாக்கத்தில் இருந்து நகரின் முக்கிய சாலை வழியாக துறைமுகத்திற்கு அனுமதிக்கப்படுதாகவும், இதற்காக மாதம் ஒரு லட்சம் வரை குறிப்பிட்ட போக்குவரத்து காவலர்கள் பெறுவதாக தமிழ்நாடு சமையல் எண்ணெய் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

துறைமுகத்திலிருந்து காமராஜர் சாலை, அண்ணா சாலை வழியாக மேடவாக்கம் சென்றடைய 30 கிலோமீட்டர் மட்டுமே தூரம் என்பதால் லஞ்சம் கொடுத்துவிட்டு, இந்த குறிப்பிட்ட டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மட்டும் முறைகேடு செய்வதாக குற்றம்சாட்டும் சமையல் எண்ணெய் டேங்கர் லாரி உரிமையாளர்கள், காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட எண்ணூர்- மணலி விரைவு சாலை வழியாக துறைமுகம் சென்றடைய எழுபது கிலோமீட்டர் தொலைவுடன் மூன்று சுங்கச்சாவடி கட்டணம் சேர்த்து 800 ரூபாய் செலவாகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சென்னை அடையாறில் இந்த எண்ணெய் நிறுவனத்தின் டேங்கர் லாரி விபத்தில் சிக்கி சாலை முழுவதும் எண்ணெய் கசிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியது. அதேபோல் கடந்த ஆண்டு இதே நிறுவனத்தின் டேங்கர் லாரி சமையல் எண்ணெயுடன் துறைமுகம் நோக்கி வரும்பொழுது ஜெமினி மேம்பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஒரு முறை இந்த டேங்கர் லாரி மோதி மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் பெண் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.

எனவே சென்னை நகருக்குள் முறையான வழியில் வாகனங்கள் இயங்குவதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமையல் எண்ணெய் டேங்கர் லாரி உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

 

 

 

 

 

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement