செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

விஜயதசமி கொண்டாட்டம் கோவில்களில் வித்யாரம்பம், அகரம் எழுதிய குழந்தைகள்

Oct 15, 2021 01:16:38 PM

தமிழகம் முழுவதும் இன்று விஜயதசமி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயதசமி நாளில், சரஸ்வதி தேவியை கொண்டாடும் விதமாக, குழந்தைகளின் நாவில் அகரம் எழுதி, குழந்தைகளின் கையால் நெல்மணியிலும் அகரம் எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது, தொடங்குவது ஆகியவற்றுக்கு இந்நாள் உகந்ததாக நம்பப்படுகிறது. குழந்தைகள் தடையின்றி எழுதவும், பேசவும் ஆரம்பமாக இருக்க வேண்டும் என்ற முறையில் இந்நாளில் வித்யாரம்பம் நடக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் விஜயதசமியை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நோட்டு, பேனா போன்றவற்றை வைத்து சரஸ்வதி அம்மனை வழிப்பட்டனர். மேலும், குழந்தைகளை நெல்லில் ஓம், அ, ஆ, ஆகிய எழுத்துகளை எழுதவைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி ஓம்சக்தி கோவிலில், குழந்தைகளின் நாவில் பச்சரிசியில் எழுத்துக்களை எழுதி பெற்றோர் எழுத்தறிவித்தனர். மேலும், தட்டிலுள்ள அரிசியின் மீது குழந்தைகளின் விரல்ளை பிடித்து எழுத்துக்களை எழுத வைத்து சொல்லிக் கொடுத்தனர்.

இதேபோன்று, கோவை, திருபூர், தூத்துக்குடி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள அம்மன் கோவில்களில் சரஸ்வதி அம்மனை போற்றும் விதமாக வித்யாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.


Advertisement
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement