செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குழந்தையுடன் காத்திருந்த வேட்பாளரின் கணவர் - அடைக்கலம் கொடுத்த போலீசார் 

Oct 13, 2021 01:19:46 PM

திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அதிமுக பெண் வேட்பாளர் ஒருவர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதற்காக, தனது குழந்தையை கணவரிடம் விட்டுச்சென்றார். கொட்டும் மழையில் மனைவியின் வெற்றிக்காக குழந்தையுடன் காத்திருந்த கணவருக்கு போலீசார் அடைக்கலம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பிருந்தே வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் குவிந்திருந்தனர். வெற்றி பெற்ற வேட்பாளர்களை அவரது ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் அள்ளித் தூக்கி மாலை அணிவித்து கொண்டாடினர்.

இந்த நிலையில், கூட்டத்தில் 6 மாத கைக்குழந்தையுடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முன்பு காத்திருந்த நபரொருவர் திடீரென மழை பெய்ய தொடங்கியதால் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள காவல் துறையின் பாதுகாப்பு கூடாரத்திற்கு ஓடிவந்தார். கையில் குழந்தையுடன் மழையில் நனைந்தபடி இங்கு வரவேண்டுமா ? என காவல்துறையினர் கேள்வி எழுப்ப, அவர் தனது மனைவி ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடுவதாகவும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருப்பதாகவும் குழந்தை அழுவதால் அவரை பார்க்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதற்கான அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என கூறிய காவல்துறையினர், பச்சிளம் குழந்தை என்பதால் குழந்தையின் தாயாரை அழைத்து வருவதற்காக, பெண் காவலர் ஒருவர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குச் சென்றார். சிறிது நேரத்தில் குழந்தையின் தாய் அங்கு விரைந்து வந்தார். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 5-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றியுடன் திரும்பிய அந்த பெண் அதிமுக வேட்பாளரான அபிராமி.

குழந்தையை கையில் எடுத்துக் கொஞ்சிய தாயிடம், இது போன்ற இடங்களுக்கு கைகுழந்தையை தூக்கி வருவது நோய்பரவலுக்கு வழிவகுக்கும் என்று போலீசார் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

 

 

 

 


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement