செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலை..!

Oct 13, 2021 09:08:08 PM

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 9 மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிகளையும் திமுகவே கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. 

9 மாவட்டங்களில் மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 138 இடங்களில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு இடங்களில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்கள் வசமாக்கியுள்ளன.

எஞ்சிய செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் தலா ஒரு இடத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், தேர்தல் நடந்த 9 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியையும் திமுகவே கைப்பற்றுகிறது.

அதேபோன்று, ஒன்றிய கவுன்சிலருக்கான பதவியிடங்களில் மொத்தமுள்ள 74 ஒன்றியங்களில் 73 ஒன்றியங்களை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியுள்ளன. காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் திமுக கூட்டணி வென்றுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் திமுக வெற்றி வாகை சூடியுள்ள நிலையில், திருப்போரூர் ஒன்றியத்தில் மட்டும் இழுபறி நீடிக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின் படி மொத்தம் உள்ள 1381 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளன.

அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு 200க்கும் மேற்பட்ட ஒன்றிய வார்டுகள் மட்டுமே கிடைத்தன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக, 47 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை வென்று மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

அமமுக நான்கு இடங்களையும், தேமுதிக ஒரு இடத்தையும் வென்ற நிலையில், நாம் தமிழர் கட்சி ஒரு ஒன்றிய கவுன்சிலர் இடத்தில் கூட வெல்லவில்லை.

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement