செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முந்திரி ஆலை தொழிலாளர் கொலை வழக்கு - கடலூர் எம்.பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரண்

Oct 11, 2021 05:41:25 PM

முந்திரி பருப்பு ஆலை தொழிலாளி கோவிந்த ராஜ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த கடலூர் எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க  நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி பருப்பு ஆலை, பண்ருட்டி அருகில் பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. அங்கு வேலை செய்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரை எம்.பி. ரமேசும், அவரது ஆட்களும் தாக்கிக் கொலை செய்துவிட்டதாக எழுந்த புகாரில் வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் கடந்த 28ஆம் தேதி விசாரணை தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கோவிந்தராஜ் அடித்து, விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரது ஊழியர்கள் 5 பேரை வழக்கில் எதிரிகளாக சேர்த்தனர். எம்.பி. ரமேஷின் உதவியாளர் உட்பட ஊழியர்கள் 5 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், ரமேஷ் தலைமறைவானார்.

இந்நிலையில், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் நீதிமன்ற நடுவர் கற்பகவல்லி முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, மீண்டும் 13ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து ரமேஷை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு கடலூர் கிளை சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். எம்.பி. ரமேஷை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement