செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முந்திரி ஆலை தொழிலாளி கொலை... 5 பேர் கைது - கடலூர் எம்.பி தலைமறைவு?

Oct 09, 2021 07:19:42 PM

கடலூரில் எம்பி ரமேசுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முதல் எதிரியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எம்பி ரமேஷ் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரை தேடி வருவதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பணிக்கன் குப்பத்தில் எம்.பி., டி.ஆர்.வி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை இயங்கி வருகிறது. கடந்த மாதம் 19-ந் தேதி அங்கு வேலைக்கு சென்ற மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து மர்ம மரணம் என காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், எம்.பி.யும், அவரது ஆட்களும் அடித்துக் கொலை செய்ததாக கோவிந்தராஜ் உறவினர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து, சென்னை நீதிமன்ற உத்தரவின்படி கோவிந்தராஜ் உடலுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

அத்துடன் கோவிந்தராஜுவின் மகன் செந்தில்வேல் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்திருந்தார். அந்த புகாரில், தனது தந்தை கோவிந்தராஜுவை எம்.பி.யின் ஆட்கள் அடித்து துன்புறுத்தியதாகவும், பின்னர் பொய் வழக்கு பதிவு செய்வதற்காக ரத்தக் காயங்களுடன் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியிருந்தார். மேலும், அங்கிருந்த போலீசார் தனது தந்தையை புகைப்படம் எடுத்துவிட்டு, மீண்டும் எம்.பி.யின் ஆட்களுடனேயே அனுப்பி வைத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்ட முந்திரி தொழிற்சாலை மற்றும் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தியதில், கோவிந்தராஜை காவல் நிலையம் அழைத்து வந்த சிசிடிவி காட்சிகளும், போலீசார் அவரை எடுத்த புகைப்படமும் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் எம்.பி. ரமேஷ் அவரது மேலாளர் கந்தவேல், உதவியாளர் நடராஜன் மற்றும் தொழிலாளர்கள் அல்லாபிச்சை, வினோத், சுந்தராஜன் ஆகிய 3 பேர் என மொத்தமாக 6 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. கொலை, கூட்டுச் சதி, சதி திட்டம் தீட்டுதல், தடயங்களை மறைப்பது, கூட்டாக சேர்ந்து தாக்குவது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.பி. ரமேஷ் தலைமறைவாகிவிட்டதாக சொல்லப்படும் நிலையில், மற்ற 5 பேரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, எம்.பி.யின் உதவியாளர் நடராஜன் கைதுக்கு பிறகு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறி கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement