பாராலிம்பிக் போட்டியிலும், சதுரங்கப் போட்டியிலும் பங்கேற்றுப் பதக்கங்கள் வென்ற விளையாட்டுத் துறையினர் 18 பேருக்கு ஊக்கத்தொகையாக 3 கோடியே 98 இலட்ச ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிப் பாராட்டியுள்ளார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என 18 பேருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கிப் பாராட்டினார்.பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மாரியப்பன் தெரிவித்தார்.
தமிழக அரசு ஊக்கமளித்து வருவதால் அடுத்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் சதுரங்க வீரர்கள் அதிகம்பேர் உருவாக வாய்ப்புள்ளதாக விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.