செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

திருமணமான நான்கே மாதத்தில் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி...!

Oct 03, 2021 09:22:00 PM

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே திருமணமான நான்கே மாதத்தில் தகாத உறவை தட்டிக் கேட்டதாக கூறி கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்து, சடலத்தை கிணற்றில் வீசிவிட்டு 10 நாட்களாக நாடகமாடி வந்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கந்தர்வகோட்டை அருகே போரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிதுரைக்கும் - நந்தினிக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு புலவன்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்த நந்தினியை, பெற்றோர் கட்டாயப்படுத்தி பாண்டிதுரைக்கு திருமணம் செய்துவைத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், திருமணத்திற்கு பின்பும் தனது காதலை தொடர்ந்து வந்த நந்தினி, கணவருக்கு தெரியாமல் அந்த இளைஞரை சந்தித்து பேசி வந்ததாகவும், இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி முதல் பாண்டிதுரை மாயமான நிலையில், பல இடங்களில் தேடிய அவரது தாயார், ஆதனக்கோட்டை போலீசில் புகாரளித்துள்ளார். போலீசாரும் வழக்குப்பதிந்து பாண்டிதுரையை தேடி வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் மனைவி நந்தினியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் பாண்டிதுரை கொல்லப்பட்ட தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. விசாரணையில் சம்பவத்தன்று வழக்கம்போல் கணவருக்கும், தனக்கும் சண்டை நடந்ததாகவும், அப்போது கணவர் தன் கழுத்தை நெரித்ததால், ஆத்திரமடைந்து பதிலுக்கு அரிவாளால் தலையில் வெட்டியும், அடித்தும் கொலை செய்து, சடலத்தை அருகிலுள்ள உறைகிணற்றில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

மேலும், கணவனை கொலை செய்துவிட்டு, ஒன்றுமே தெரியாதது போல் நடித்த நந்தினி, குடும்பத்தினர் அவரை தேடும் போது தானும் சேர்ந்து தேடியிருக்கிறார். இதனையடுத்து அழுகிய நிலையில் உறை கிணற்றில் கிடந்த பாண்டிதுரையின் சடலத்தை போலீசார் மீட்டனர். இதனையடுத்து, நந்தினியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement