செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

புலி சுட்டுக் கொல்லப்படாது.. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க ஏற்பாடு..!

Oct 03, 2021 09:18:21 PM

நீலகிரி மாவட்டம் மசினகுடி - சிங்காரா பகுதியில், 9-வது நாளாக ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புலியை பிடிக்க தனிப் பயிற்சி பெற்ற வீரர்கள் கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் போஸ்பரா வனப்பகுதியில் உலா வந்த, டி23 எனப்பெயரிடப்பட்டுள்ள 13 வயது மதிக்கத்தக்க ஆண் புலி, வயது முதிர்வு காரணமாக தனது வேட்டையாடும் திறனை இழந்துள்ளது. கடந்த ஓராண்டாக, வாழ்விடத்தை விட்டு வெளியேறி, வனப்பகுதி அருகில் உள்ள ஊர்களுக்குள் புகுந்து கால்நடைகளை தாக்கி கொல்லத் தொடங்கியது.

40க்கும் மேற்பட்ட கால்நடைகள், நான்கு மனிதர்களைக் கொன்று மக்களை அச்சுறுத்தும் ஆட்கொல்லி புலியாக மாறியுள்ளது. இந்நிலையில், புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ் நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த வனத்துறையினர், 20க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர், ஆறு மருத்துவ குழுவினர் 9-வது நாளாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மசினகுடியை அடுத்த சிங்காரா வனப்பகுதியில் ஆட்கொல்லி புலி இருப்பதை கண்டறிந்த வனத்துறையினர், அது பதுங்கியுள்ள இடத்தை குறிப்பாக கண்டறிய மோப்ப நாய் அதவை களமிறக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூன்று இடங்களில் மரத்தின்மீது பரண் அமைத்து, கால்நடைகளை அப்பகுதியில் கட்டிவைத்தும் புலி நடமாட்டத்தை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ட்ரோன் கேமிரா பயன்படுத்தியும் புலி பதுங்கியுள்ள இடத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப உத்திகளை கையாண்டு புலியை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. மேலும் அப்பகுதியிலிருந்து புலி வேறு பகுதிக்கு தப்பி செல்வதை தடுப்பதை கண்காணிக்க கோவையிலிருந்து தனி பயிற்சி பெற்ற நான்கு உயரடுக்கு எலைட் படையினர் மசினகுடி வந்துள்ளனர்.

சுமார் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆட்கொல்லி T23 புலியை பிடிக்கும் பணியில் 9-வது நாளாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ஆட்கொல்லி புலி, மயக்க மருந்து செலுத்தி மட்டுமே பிடிக்கப்படும் என்றும் சுட்டுக் கொல்லும் எண்ணம் வனத்துறைக்கு இல்லை என்றும் தமிழ்நாடு முதன்மை உயிரின வனபாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.

ஆட்கொல்லி புலிக்கு மயக்க ஊசி செலுத்த கால்நடை மருத்துவர்கள் காட்டுக்குள் செல்லவுள்ளனர். இதற்காக, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. கும்கி யானை மீது அமர்ந்து கால்நடை மருத்துவர்கள் காட்டுக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement