செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மின்சாரம் தாக்கி துடிதுடித்த தந்தையை காப்பாற்றச் சென்ற இரு மகன்கள் - மூன்று பேரும் பலியான சோகம்...!

Oct 01, 2021 10:01:16 PM

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி 5 பேர் தூக்கி எறியப்பட்ட நிலையில், தந்தை, இரண்டு மகன்கள் என ஒரே குடும்பத்தை மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்சாரம் தாக்கி துடிதுடித்துக் கொண்டிருந்த தந்தையை காப்பாற்றச் சென்ற 2 மகன்களும் பலியாகினர்.

திண்டுக்கல் சின்னாளபட்டி அருகே செட்டியப்பட்டியை சேர்ந்த திருப்பதி - வசந்தா தம்பதிக்கு 12-ம் வகுப்பு பயிலும் சந்தோஷ்குமார் என்ற மகனும், 10ஆம் வகுப்பு பயிலும் விஜய் கணபதி என்ற மகனும் இருந்தனர். திருப்பதி - வசந்தா தம்பதி கூலி வேலை பார்த்து வரும் நிலையில், இன்று காலை வழக்கம்போல் திருப்பதி தனது மனைவியை வேலையிடத்தில் இறக்கிவிட்டுவிட்டு, வீட்டுக்கு மழையில் நனைந்துக் கொண்டே வந்திருக்கிறார். வீட்டுக்கு வந்துவிட்டு தலையை துவட்டிவிட்டு, துண்டை வீட்டுக்கு முன்பிருந்த இரும்பு கம்பியில் காயப் போட்டிருக்கிறார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக திருப்பதியை மின்சாரம் தாக்கிய நிலையில், வீட்டில் இருந்த மகன்கள் இருவரும் தந்தையை காப்பாற்றும் நோக்கில் அவரை பிடித்துள்ளனர். இதில், அவர்கள் உடலிலும் மின்சாரம் பாய்ந்த நிலையில், அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டுக்காரரான முருகனும், அவரது மனைவி சூர்யாவும் கீழே கிடந்த மரக்கட்டையை வைத்து தாக்கி தந்தையையும், மகன்களையும் விடுவிக்க முயன்ற போது, 5 பேரும் மொத்தமாக தூக்கி எறியப்பட்டனர்.

இதனையடுத்து, கிராம மக்கள் சேர்ந்து 5 பேரையும் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், திருப்பதியும், அவரது 2 மகன்களும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.காப்பாற்றச் சென்ற முருகனும், சூர்யாவும் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் மின்சாரம் தாக்கி பலியான சோகம் தாளாமல் உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை கலங்கச் செய்தது.


தகவல் அறிந்து போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்பதி வீட்டுக்கு மின் இணைப்பு வரும் ஒயர் பி.வி.சி. பைப்புக்குள் கொண்டு செல்லப்பட்டிருந்தது. அந்த பி.வி.சி. பைப் தொங்காமல் இருக்க, பிடிமானமாக வீட்டு மீட்டர் பாக்ஸுக்கும், போஸ்டுக்கும் இடையே Stay wire எனப்படும் இரும்பிலான கம்பி ஒன்று போடப்பட்டிருந்தது.

 

 


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement