செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

5 ஆண்டுகள் சிறை தண்டனை.. மயங்கி விழுந்த இந்திரகுமாரி

Sep 29, 2021 09:26:54 PM

அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு ஊழல் வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம், 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை கேட்டதும் அவர் நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்த சம்பவமும் அரங்கேறியது. 

1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகள் தொடங்குவதாக கூறி தனது கணவர் நடத்தி வந்த அறக்கட்டளைகளுக்கு 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அரசு நிதியை ஒதுக்கீடு செய்ததாகவும், ஆனால் இந்த நிதியில் குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் செய்யாமல் ஏமாற்றியதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் சண்முகம் ஆகிய 5 பேர் மீது  ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. வழக்கின் விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு மற்றும் சண்முகம் ஆகிய 3 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, இந்திரகுமாரிக்கும், அவரது கணவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையோடு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.

இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணனை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் சிக்கிய மற்றொரு நபரான கிருபாகரன் இறந்துவிட்டார். தீர்ப்பு அளிக்கப்பட்டதும் அதனை கேட்ட இந்திர குமாரி நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார்.  பின்னர், அவரை காவல்துறையினர் ஆறுதல்படுத்தி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement