செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒரே காவல்நிலைய எல்லையில் அடுத்தடுத்து 2 கொலைகள்.. இருவரின் தலைகளும் துண்டிப்பு..! திருநெல்வேலியில் பயங்கரம்

Sep 15, 2021 01:30:00 PM

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்ப்பள்ளம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்த நாளில் இருவர் தலை துண்டித்து கொல்லப்பட்டு, தலைகளை தனியே எடுத்து வீசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்ப்பள்ளம் அருகே திடியூர் வடுகப்பட்டி காட்டுப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. அதன் அருகே திங்களன்று தலை துண்டிக்கப்பட்ட உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரித்ததில் கொல்லப்பட்டவர் கீழச் செவல் நயினார்குளத்தைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் என்பதும், மதுவாங்கிவிட்டு வந்தபோது அவரை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டிக் கொன்றிருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

துண்டிக்கப்பட்ட அவரது தலையைக் கோபாலசமுத்திரம் அருகே காவல்துறையினர் கண்டெடுத்தனர். இது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரித்து வருவதுடன் தனிப்படை அமைத்துக் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.  

இந்த நிலையில் அதிகாலை கோபாலசமுத்திரத்தில் வேளாண் பணிகளுக்கு இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்துவந்த மாரியப்பன் குளத்தங்கரை வழியாகச் சென்றபோது அவரைச் சிலர் வழிமறித்து வெட்டிக் கொன்றனர். தலை, ஒரு கால், ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் கிடந்தது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றினர்.

துண்டிக்கப்பட்ட தலை அருகே உள்ள காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. முன்னீர்ப்பள்ளம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சியைம் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோபாலசமுத்திரம், செவல், முன்னீர்ப்பள்ளம் ஆகிய பகுதிகளில் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொலை நிகழ்ந்த இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் ஆய்வு செய்ததுடன் முன்னீர்ப்பள்ளத்தில் முகாமிட்டுத் தனிப்படைகளை அமைத்துக் கொலையாளிகளைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளார். இரண்டு கொலைகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement