செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

செம்மரக் கடத்தலில் தகராறு.. சக கூட்டாளியை கடத்திய கும்பல்.. தப்பிக்கும்போது கிணற்றில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!

Sep 14, 2021 09:38:50 PM

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே செம்மர கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரை சக கூட்டாளிகள் கடத்தி வைத்திருந்த நிலையில், அவர்களிடமிருந்து தப்பிச் செல்லும்போது கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜாவும் அப்பகுதியைச் சேர்ந்த மேலும் சிலரும் அவ்வப்போது ஆந்திரா சென்று செம்மரங்களை வெட்டி விற்பனை செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

கடந்தமுறை வெட்டிய செம்மரங்களை போலீசுக்குப் பயந்து ஓரிடத்தில் மறைத்துவைத்துவிட்டு ஊர் திரும்பியுள்ளனர். சில நாட்கள் கழித்து கூட்டாளிகளுக்குத் தெரியாமல் ஆந்திரா சென்ற இராஜா, அந்த செம்மரங்களை சுமார் 6 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

இதனையறிந்த சக கூட்டாளிகள் இராஜாவை கடத்திச் சென்று புதுப்பட்டி பகுதியில் ஒளித்து வைத்துக் கொண்டு அவரது உறவினர்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கடத்தல் கும்பல் போதையில் இருந்த நேரம் பார்த்து, இராஜா அவர்களிடமிருந்து தப்ப முயன்றதாகவும் இருட்டில் அங்கிருந்த கிணறு ஒன்றில் விழுந்து அடிபட்டு இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement