செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஐ போன் திறந்தால் பிராங்க் பாஸ் உள்ளே போய்விடுவாராம் ..! டூயட் ஸ்டில்ஸ் அவுட்..!

Sep 12, 2021 07:18:39 PM

திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பிராங்க் பாஸ் யூடியூப்பருடனான காதல் குறித்து மாணவியின் தோழி ஒருவர் பேசியுள்ள ஆடியோ வெளியாகி உள்ளது. பாஸ்வேர்டு தெரியாததால் மாணவியின் ஐ போன் சென்னை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி தனரகஷ்னா என்பவர் தனது கை நரம்பை அறுத்துக் கொண்டும், தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக நவல்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தங்கள் மகளின் தற்கொலைக்கு அவரை காதலித்து வந்த பிராங் பாஸ் யூடியூப்பர் சூர்யாவின் தொல்லையே காரணம் என்றும் , சென்னையில் வைத்து மாணவி தனரக் ஷனாவை , யூடியூப்பர் சூர்யாவும் அவனது தாயும் அடித்து விரட்டியதால் தனரக்சனா உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தனர். தனரக்சனா பயன்படுத்தி வந்த ஐபோனையும் போலீசில் ஒப்படைத்திருந்தனர்.

பாஸ்வேர்டு தெரியாததால் தனரக் ஷனாவின் ஐ போனை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது இதையடுத்து அந்த பெண்ணின் தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களிடம் விசாரித்த போது பிராங்க் பாஸ் சூர்யாவுக்கும் , தனரக் ஷனாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் குறித்து சில முக்கிய தகவல்களை தெரிவித்தனர். சூர்யாவுடன் அந்த பெண் நெருக்கமாக இருக்கும் போது எடுத்த புகைபடங்களை கல்லூரி தோழர் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.

தோழி ஒருவர் கூறும் போது கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த போது தனரக் ஷனாவை சூர்யா சந்தித்ததாகவும், பின்னர் பலமுறை தொடர்பு கொண்டு, காதலிப்பதாக கூறி வற்புறுத்தி சம்மதிக்க வைத்ததாக தெரிவித்த அந்த தோழி ஆரம்பத்தில் பிராங்க் பாஸ் சூர்யா , தனரக் ஷனா காதலிக்க மறுத்ததால் தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார்

ஆனால் தனரக் ஷனா படித்த கல்லூரி நிர்வாகத்தினர் , சூர்யாவை தாங்கள் கல்லூரியின் எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட மாணவி கூட இந்த ஆண்டு சரியாக கல்லூரிக்கு வந்ததில்லை என்றும் மறுத்துள்ளனர். இதனால் தனரக் ஷனாவின் ஐ போனை திறந்தால் மட்டுமே சூர்யாவுடனான தொடர்பு மற்றும் சென்னையில் நடந்த சம்பவம் தொடர்பான உண்மை நிலவரம் தெரியவரும் என்று தெரிவித்த காவல் துறையினர் தடயவியல் பரிசோதனைக்காகவும் பாஸ்வேர்டு இல்லாமல் அதனை திறப்பதற்காகவும் சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தெரிவித்தனர். ஐ போன் திறந்தவுடன் , அதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பிராங்க் பாஸ் யூடியூப்பரை பிடித்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


Advertisement
புதுக்கோட்டையில் அரசுத் தொடக்கப்பள்ளியின் 50ம் ஆண்டு முன்னிட்டு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைச்சர் திறந்து வைத்தனர்.
தென்காசியில் 100க்கும் மாணவ மாணவிகள் கையில் செடியைப் பிடித்துக் கொண்டு யோகா சாதனை !!
த.வெ.க.வின் முதல் மாநாட்டில் விஜய் 45 நிமிடங்கள் வரை உரையாற்றுகிறார் !!
மாநாட்டுத் திடலுக்கு விஜய் வருகை
வாய்க்கால் தூர் வராததால் விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீரால் மூழ்கி அழுகும் பயிர்கள்..
இந்தியில் இருந்த விளம்பரத்தை கருப்பு பெயின்ட்டால் அடித்து அழித்த வி.சி.க.வினர்
மதுரையில் பல இடங்களில் இரவோடு இரவாக மழை நீர் அகற்றம் - முதலமைச்சர்
திருப்பதியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம் !!
திருநெல்வேலியில் மூளைச்சாவு அடைந்த காவல் நிலைய உதவி ஆயிவாளரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது ..
நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர்

Advertisement
Posted Oct 27, 2024 in Big Stories,

மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!

Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

விஜயின் வி-சாலை மாநாடு... விவேகமும், வியூகமும் வெற்றிக்கு வழிவகுக்குமா...

Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

காலை பத்தரை மணிக்கு வாயுக் கசிவால் மயக்கம்.. மாலை வரை மவுனம் ஏன் ?.. பள்ளிக்கு எதிராக போர்க்குரல்

Posted Oct 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கையில கருப்பு கயிறு “கட்ட அவிழ்த்து விடு”.. மாமியாரை குத்திய மருமகள்..! இரு கைகளிலும் கத்தியுடன் ஆக்ரோசம்...!

Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?


Advertisement