செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மருமகனை கொல்ல முயற்சி... மகள் வீட்டை தகர்க்க வெடிகுண்டு : தந்தை, மகன்கள் கைது

Aug 21, 2021 06:35:04 PM

திருப்பத்தூர் அருகே பாறைக்கு வெடிவைக்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை வைத்து, வீட்டையே தகர்த்து சொந்த மருமகனை கொலை செய்ய முயற்சித்ததாக எழுந்த புகாரில் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தையின் பேச்சை கேட்டு, அதிகாலையில் தீவிரவாதிகளைப் போல சகோதரி வீட்டில் குண்டு வைத்து, வெடிக்க வைப்பதற்காக மின்கம்பியில் கனெக்சன் கொடுத்த சகோதரர்கள் இருவரும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். அதேபகுதியை சேர்ந்த ராஜா என்பவரது இரண்டாவது மனைவியின் மகளான அணிதாவை, நரசிம்மன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். ராஜாவுக்கு முதல் மனைவி மூலமாக யுவராஜ் மற்றும் கார்த்திக் என இரு மகன்களும் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பூர்விக சொத்தான 3 ஏக்கர் நிலத்தை அடமானத்தில் இருந்து மீட்க முடியாமல் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அந்த சொத்தை மருமகன் நரசிம்மன் 42 லட்ச ரூபாய்க்கு வாங்கிய நிலையில், அதன் விலை தற்போது இரு மடங்குக்கும் அதிகரித்ததாக கூறப்படுகிறது. எனவே, அந்த சொத்தை தன்னிடம் விற்று விடுமாறு மகள் மற்றும் மருமகனிடம் ராஜா தகராறில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

பூர்வீக சொத்து என்பதால், பணம் கொடுத்து வாங்கிக் கொள்ள மாமானார் ராஜா முன்வந்ததாகவும், ஆனால் நரசிம்மன் தர மறுத்துவந்ததால் ராஜாவும் அவரது மகன்களும் ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் வெளியே படுத்திருந்த நரசிம்மனின் தந்தை ஏதோ சத்தம் கேட்டு எழுந்து பார்த்துள்ளார். அப்போது கார்த்திக் மற்றும் யுவராஜ் இருவரும் சமையலறையில் வெளிப்புறமாக இருந்த ஓட்டை வழியே ஜெலட்டின் குச்சிகளை பொருத்திக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். கூச்சல் போட்டவுடன், இருவரும் கீழே குதித்து தப்பி ஓடியுள்ளனர். 

ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைப்பதற்காக 500 அடி தொலைவில் மின் கம்பத்தில் மாட்டுவதற்காக வயர்களையும் அவர்கள் பொருத்தியிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வயர்களை துண்டித்து விட்டு, போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் ஜெலட்டின் குச்சிகளை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் ராஜா, அவரது மகன்கள் யுவராஜ் மற்றும் கார்த்திக்கை கைது செய்து விசாரித்த போலீசார், கொலை முயற்சி, சட்டவிரோதமாக வெடி பொருளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஜெலட்டின் குச்சிகளை சப்ளை செய்த விஜயகுமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்து பிரச்சனை காரணமாக தன் சொந்த மருமகனையே வெடிகுண்டு வைத்து கொல்ல நடைபெற்ற முயற்சி, திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement