செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சிசிடிவி, வயர்லெஸ் கருவி ஊழல் புகார்: 14 போலீஸ் அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர்

Aug 21, 2021 02:55:18 PM

காவல்துறைக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கியதில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பாக எஸ்பி அன்புச் செழியன், ஏ.டி.எஸ்.பி.க்கள் ரமேஷ், உதய சங்கர், 7 ஆய்வாளர்கள், 3 உதவி ஆய்வாளர்கள், ஒரு ஓய்வுபெற்ற டிஎஸ்பி என 14 காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக காவல் துறைக்கு, சிசிடிவி மற்றும் ரேடியோ, வயர்லஸ் கருவிகள், உள்ளிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில்  முறைகேடு நடந்திருப்பதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, காவல்துறை அதிகாரிகள் மற்றும் சில நிறுவனங்களுக்கு சொந்தமான 30 இடங்களில் அப்போது சோதனை நடத்தப்பட்டது.

வழக்கமாக, லஞ்ச ஒழிப்பு துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர். அதன் இணையதளத்தில் வெளியிடப்படும். ஆனால் தொழில்நுட்ப உபகரணங்கள் ஒப்பந்த  முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். லஞ்ச ஒழிப்புத்துறை இணைய தளத்தில் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது வெளியாகியுள்ள அந்த முதல் தகவல் அறிக்கையின் படி, 14 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 2 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி. அன்புச்செழியன், ஏ.டி.எஸ்.பி.க்கள் ரமேஷ், உதய சங்கர், 7 ஆய்வாளர்கள், 3 உதவி ஆய்வாளர்கள், ஒரு ஓய்வுபெற்ற டிஎஸ்பி என காவல்துறையை சேர்ந்த 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, வி - லிங்க், லுக்மேன் எலக்ட்ரோப்ளாஸ்ட் ஆகிய 2 நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுச்சதி, போலி ஆவணம் தயாரித்தல், போலி ஆவணம் பயன்படுத்துதல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட பிரிவுகள் என 8 பிரிவுகளில் வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் லுக்மேன் எலக்ட்ரோப்ளாஸ்ட் நிறுவனம், 308 காவல் நிலையங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களுக்கு  செயல்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட விவாகரத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு தொடர்பாக காவல்துறை தொழில்நுட்ப பிரிவு டிஐஜி அளித்த அறிக்கையானது, வழக்கின் முக்கிய ஆதாரமாக இருந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Advertisement
தரக்குறைவாகப் பேசியதால் தாக்குதல்.. பெட்டிக்கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கைது
குப்பைக் கிடங்கில் குப்பையோடு குப்பையாகக் கிடந்த வைரத் தோடு - கண்டுபிடித்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்..!!
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement