செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

முறைகேடாக டெண்டர் வழங்கியதாக புகார் ; எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கான காரணம் வெளியீடு

Aug 10, 2021 06:02:10 PM

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.  

எஸ்பி வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த 2014 முதல் 2018 காலகட்டத்தில் தனக்கு நெருக்கமானவர்கள் நடத்தி வரும் நிறுவனங்களுக்கு, முறைகேடாக டெண்டர் வழங்கியதாக அறப்போர் இயக்கமும், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் லஞ்ச ஒழிப்பு துறையில் 2018ஆம் ஆண்டில் புகார் கொடுத்திருந்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த புகார்களின் அடிப்படையில், பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டு, விசாரணை அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டதும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, கூட்டுச் சதி, குற்ற உடந்தை மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் எஸ்.பி.வேலுமணி உட்பட 7 நபர்கள் மற்றும் 10 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு ரூ. 464.02 கோடி மதிப்பிலும், கோவை மாநகராட்சிக்கு ரூ.364.81 கோடி மதிப்பிலும் டெண்டர்கள் வழங்கப்பட்டதாகவும், இந்த டெண்டர்களை எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் நிறுவனம் உட்பட வழக்கில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக புகார் எழுந்தது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வழக்கில் சிக்கியுள்ள நிறுவனங்களின் வருவாய் கடந்த 2012-13ல் இருந்ததை விட 2018-19-ல் பல நூறு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement