செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மகளின் கனவுக்காக மௌனம் காத்த தாய்.. விஷயம் தெரிந்து கதறிய ஒலிம்பிக் வீராங்கனை..!

Aug 08, 2021 01:39:37 PM

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, திருச்சி திரும்பிய தடகள வீராங்கனை தனலட்சுமி, அவருடைய அக்காள் இறந்த செய்தி கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுதார். நாட்டுக்காக விளையாடச் சென்ற மகளின் கவனம் கடுகளவும் சிதறிவிடக் கூடாது என எண்ணிய தனலட்சுமியின் தாயார், மறைவுச் செய்தியைக் கூட மறைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்த தமிழக தடகள வீராங்கனையான தனலட்சுமி, பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றிருக்கிறார். ஒலிம்பிக் தகுதி சுற்றில் நிர்ணயிக்கப்பட்ட ஓட்டப் பந்தய தூரத்தை மிக குறைவான நேரத்தில் கடந்த தனலட்சுமிக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

போட்டிக்கும் தயாராகவும், டோக்கியோ புறப்படுவதற்காகவும் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலேயே தங்கியிருந்த தனலட்சுமி அங்கிருந்தே டோக்கியோவுக்கும் புறப்பட்டுச் சென்றார். இதற்கிடையில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தனலட்சுமியின் சகோதரி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை தனலட்சுமிக்கு சொன்னால், போட்டியிலிருந்து கவனம் சிதறி விடும் என எண்ணிய அவரது தாயார் உஷா, தெரியப்படுத்தாமலேயே இருந்துள்ளார். இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டி முடிந்து தமிழகம் திரும்பிய தனலட்சுமிக்கு திருச்சி விமான நிலையத்தில் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, தான் தனலட்சுமிக்கு தனது அக்காள் இறந்துவிட்ட செய்தி தெரியவந்துள்ளது. தன்னுடைய கனவுக்காக கஷ்டப்பட்ட அக்காளை இழந்து விட்டது தெரிந்து, மனமுடைந்த தனலட்சுமி விமானநிலையத்திலேயே கதறி அழுதார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்று வந்ததை கொண்டாடக் கூட முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட தனலட்சுமியை அவரது தாயார் ஆறுதல்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

எக்காரணத்தைக் கொண்டும் மகளின் கனவு சிதைந்துவிடக் கூடாது என எண்ணி, தன் மனதை கல்லாக்கிக் கொண்டு வைராக்கியமாக இருந்த தாயின் செயல் எல்லாவற்றையும் விட உயர்ந்து நிற்கிறது.

 


Advertisement
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு
ஆபரேசன் அகழி... புதுச்சேரியில் பதுங்கியிருந்த பிரபல ரௌடி பட்டறை சுரேஷ் கைது
கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !
கடந்த 3 ஆண்டுகளில் திமுக செய்தது என்ன ? - எஸ்.பி. வேலுமணி கேள்வி
எந்த புதிய அரசியல் கட்சி வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது - அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை - கனிமொழி

Advertisement
Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்


Advertisement