செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மண்டை மீது கொண்டை வைத்து கொள்ளை..! கெட்டப்பை மாற்றினாலும் கேரக்டரை மாற்றாமால் சிக்கிய மொட்டை திருடன்

Aug 06, 2021 01:51:51 PM

சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக அத்துமீறி, திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையன், சிறையில் இருந்து வெளியில் வந்து, மொட்டைத் தலையில் விக் வைத்து அடையாளத்தை மாற்றிக் கொண்டு மீண்டும் கொள்ளையடித்த போது போலீசாரிடம் சிக்கியுள்ளான். 

சென்னை வடபழனியில் கடந்த மாதம் அடுத்தடுத்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. 2 சவரன், 3 சவரன், சில ஆயிரங்களில் பணம் என கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு குறைவு என்றாலும், மூன்று கொள்ளைச் சம்பவங்களும் ஒரே பாணியில் சற்று வினோதமாக நடந்திருந்ததால் போலீசாரும் சற்று வித்தியாசமாக யோசித்து விசாரித்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட மூன்று வீடுகளும் இரட்டை கதவுகளை கொண்டவை என்பதுடன், கொள்ளை நடந்த போது வீட்டில் ஆட்களும் இருந்துள்ளனர். இரவு நேரத்தில் வீட்டில் இருப்பவர்கள் உறங்கும் நேரத்தில் திருப்புளியை வைத்து இரட்டைக் கதவுகளை சுலபமாக திறந்து லாவகமாக திருடிச் சென்றுள்ளது சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கண்டுப் பிடித்தனர்.

பொதுவாக வீடு புகுந்து திருடும் கொள்ளையர்கள் ஆள் இல்லாத வீட்டை கண்காணித்து கைவரிசை காட்டுவார்கள். ஆனால், ஆட்கள் இருக்கும் வீட்டிற்குள் புகுந்து திருடும் கொள்ளையர்கள் யார் என தனிப்படை போலீசார் பழைய குற்றவாளிகள் பட்டியலை தேடியதில் சிக்கியவன் அறிவழகன். மொட்டைத் தலையுடன் இருக்கும் அறிவழகன், இம்முறை தலையில் விக் வைத்துக் கொண்டு முக கவசம் அணிந்து தனது அடையாளத்தை மறைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு அறிவழகன் சைதாப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட போது, கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியது. பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வீட்டில் உள்ள நகைகளையும் கொள்ளையடித்து சென்றுவிடுவான்.

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி போன்ற பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறிவழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொள்ளையன் அறிவழகன் பெண்களை சீண்டுவதற்கு ஒரு காரணத்தையும் வாக்குமூலத்தில் அப்போது தெரிவித்தான். இது போன்று நடந்ததால் அவமானமாக கருதி புகார் அளிக்க வர மாட்டார்கள் என அவ்வாறு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக தெரிவித்தான்.

அதன் பிறகு இவ்வழக்குகளில் சிறையில் இருந்து வெளியில் வந்த அறிவழகன் 2019-ல் அம்பத்தூர் பகுதியில் இதே பாணியில் கைவரிசை காட்டிய போது மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.

மீண்டும் வெளியில் வந்து வடபழனி பகுதியில் கைவரிசை காட்டிய நிலையில் கொள்ளையன் அறிவழகனை அவனது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையன் அறிவழகன் இம்முறை வீட்டில் உள்ள பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடவில்லை என்கின்றனர் காவல் துறையினர். பழைய பாணியில் ஈடுபட்டால் தன்னை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் தான் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடாமல், தோற்றத்தையும் மறைத்து முடியில்லாத தனது தலையில் விக் வைத்து கொண்டு வந்ததாகவும், அப்படி வந்தும் போலீஸிடம் சிக்கிக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளான் கொள்ளையன் அறிவழகன்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement