செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவக்கம்; ஒரு கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டம்.!

Aug 05, 2021 05:32:42 PM

வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கி சிகிச்சை அளிக்கும் வகையில், மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை கிருஷ்ணகிரியில் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டம் மூலம் ஒரு கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். 

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு தினசரி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கவும், சிகிச்சைகள் அளிக்கவும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

பின்னர், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் பிசியோதெரபி கிச்சைகளை நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர், வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவப் பணியாளர்களுக்கான புதிய வாகனங்களையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

மற்ற மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தையும் முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் பார்வையிட்டார். 257 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இந்த மக்களை தேடி மருத்துவம் திட்டம் முதற்கட்டமாக 1,172 துணை சுகாதார மையம், 189 ஆரம்ப சுகாதார மையம், 50 சமுதாய நல வாழ்வு மையம், 21 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1400-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது ஏழு உறுதி மொழிகளில் அனைவருக்கும் நல்வாழ்வு என்பது முக்கியமானது எனக் குறிப்பிட்டதோடு, அனைவருக்கும் நலவாழ்வு என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.


Advertisement
கனமழை காரணமாக நாளை எந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..?
ஸ்ரீபெரும்புதூரில் மாஸ்க் அணிந்து வந்து பைக்கை திருடி செல்லும் மர்ம நபர் - போலீஸ் விசாரணை.
தீபாவளி கூட்டத்தைப் பயன்படுத்தி திருடிய 3 பெண்களை கைது செய்த போலீசார்..
மதுரை பந்தல்குடி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றி பின்னர் பாலத்தில் கொட்டப்பட்ட குப்பைகள்..
கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.
மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் ..
மகேந்திரா பேட்டரி ஆராய்ச்சி ஆய்வகத்தை திறந்து வைத்தார்அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அகில இந்திய தொழில் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள்..
மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி தமிழக அமைச்சர்கள் நினைவு மண்டபத்தில் மரியாதை..
கனமழையால் சேதமடைந்த மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆணையர் நேரில் சென்று ஆய்வு..

Advertisement
Posted Oct 24, 2024 in சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement