செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

"மக்களைத் தேடி மருத்துவம்" கிருஷ்ணகிரியில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Aug 05, 2021 10:06:47 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமையும் அவர் தொடக்கி வைக்கிறார்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்கின்றனர். இதுபோன்ற நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்குவதற்காகவும், வீடுகளுக்கே நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் "மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.

நாட்டிலேயே தமிழகத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில் இந்த திட்டத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு "மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். சாமனப்பள்ளி கிராமத்தில் பயனாளிகளின் இல்லத்திற்கே நேரடியாகச் சென்று மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

தொடர்ந்து இரண்டாவது பயனாளியின் வீட்டிற்குச் சென்று பயனாளிக்கு அளிக்கப்படும் இயன்முறை சிகிச்சையை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

தொடர்ந்து செவிலியர் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்களின் பயன்பாட்டுக்காக 3 புதிய வாகனங்களை மக்களுக்கு அர்ப்பணித்து, அவற்றைத் தொடக்கி வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து விழா மேடைக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி மூலமாக 7 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ள "மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் குறித்து ஆய்வு செய்கிறார். முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக ஆயிரத்து 172 துணை சுகாதார மையம், 189 ஆரம்ப சுகாதார மையம், 50 சமுதாய நல வாழ்வு மையம், சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 21 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட இடங்களில், 257 கோடி ரூபாய் செலவில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்படுகிறது.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement