செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தீரன் சின்னமலை நினைவு நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Aug 03, 2021 11:55:26 AM

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தீரன் சின்னமலை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1756ஆம் ஆண்டு பிறந்தார். தீர்த்தகிரி எனும் இயற்பெயர் கொண்ட அவர், இளம் வயதிலேயே போர்க்கலையில் மிகவும் சிறந்தவராய் விளங்கினார். அப்போது கொங்குநாட்டை மைசூர் மன்னர் ஆட்சி செய்ததால், கொங்குநாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசிற்குச் சென்றது.

அந்த வரிப்பணத்தைப் எடுத்து ஏழைகளுக்கு விநியோகித்த தீர்த்தகிரியிடம், “நீ யார்?" என்று கேட்டபோது, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை தடுத்ததாகச் சொல்" என்று சொல்லி அனுப்பினார். அது முதல் தீர்த்தகிரிக்கு சின்னமலை என்ற பெயர் ஏற்பட்டது. கிழக்கிந்திய கம்பெனிப் படையினர் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட அவர், 1801ஆம் ஆண்டு ஈரோடு காவிரிக்கரையிலும், 1802ஆம் ஆண்டு ஓடாநிலையிலும், 1804ஆம் ஆண்டு அரச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் பெரும் வெற்றி பெற்றார். போரில் தீரன் சின்னமலையை வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து, சங்ககிரிக் கோட்டையில் 1805ஆம் ஆண்டில், ஆடி 18ஆம் நாளில் தூக்கிலிட்டனர்.

தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக அமைச்சர்கள் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement