செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொரோனா ஸ்பிரட்டர்ஸ்..! ஓடவோ, ஒளியவோ, முடியாது; போலீஸ் மாஸ்டர் பிளான்..! 3வது அலையை தடுக்க 30 பேர்..!

Aug 03, 2021 04:27:46 PM

சென்னையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் 15 நாட்களில் எங்கெங்கு சென்று வந்தனர் என்பதை கண்டறிய 30 பேர் கொண்ட சைபர் கிரைம் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  கொரோனா 3 வது அலையின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, செல்போன் சிக்னல் உதவியுடன் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கொரோனா... உலக மக்களை உலுக்கி எடுக்கும் இந்த உருமாறி உயிர்கொல்லி அலை அலையாய் தாக்கி மக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகின்றது. 

3வது கொரோனா அலையை எதிர்கொள்ள, முதல் கட்டமாக சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் 9 வணிக பகுதிகள் மூடப்பட்டுள்ளது. கோவையில் பால், காய்கறி தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் திறக்க குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 2 வது அலையில் கொரோனா பரவலுக்கு காரணமான தொடர்பாளரை கண்டறிவதில் ஏற்பட்ட தொய்வை சரிக்கட்டும் வகையிலும், முதல் அலையில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் நோயாளிகளிடம் இருந்து திரட்டப்பட்ட விவரங்களை விட துல்லியமான தரவுகளை பெற்று கொரோனாவின் பரவலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தும் வகையிலும் சென்னை பெரு நகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 30 பேர் கொண்ட கொரோனா வார் ரூம் ஒன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இதில் சைபர் குற்றப்பிரிவில் கைதேர்ந்த காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் முக்கியபணி, பரிசோதனையில் பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நபர் கொடுக்கின்ற செல்போன் நம்பர் அவருடையதுதானா ? கடந்த 15 தினங்களில் அவர் எங்கெங்கு சென்று வந்தார்? யார் யாரை சந்தித்தார்? எந்த பகுதிகளில் எவ்வளவு நேரம் செலவிட்டார் ? அவருடன் தொடர்பில் இருந்த இருக்கும் நபர்கள் யார் ? கடைசியாக அவர் எங்கு சென்றார் ? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அவரது செல்போன் சிக்னல் மூலம் சேகரித்து அதனை சென்னை மாநகராட்சிக்கு வழங்கும் முக்கிய பொறுப்பை மேற் கொண்டு வருகின்றனர்.

முதல் அலையின் போது நோயாளியிடமே கேட்டு பெற்றதில் பலர் தவறான தகவலை அளித்ததாகவும், 2 வது அலையின் போது பலர் வேறு ஒருவரின் செல்போன் எண்ணையும், போலி முகவரியையும் கொடுத்தது போன்ற சில நிகழ்வுகள் அரங்கேறியதாலும் இந்த சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதுமட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற அண்டை மாவட்டங்களிலும் சென்னை காவல்துறையின் எல்லை இருப்பதால் போலீஸ் உதவியுடன் இந்த கண்காணிப்பு பணி முழுமையாக ஒங்கிணைக்கப்பட்டுள்ளதாக கூறபடுகின்றது.

30 பேர் கொண்ட இந்த கண்காணிப்பு குழுவை வழி நடத்தும் பொறுப்பை, மத்திய குற்றபிரிவு துணை ஆணையர் பாலசுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களிலும் இங்குள்ள தொற்றாளர்கள் மூலம் கொரோனா பரவாமல் தடுக்க சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையுடன் இணைந்து சென்னை பெருநகர காவல்துறை இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இனி கொரோனா ஸ்பிரட்டர்ஸ் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று சுட்டிக்கட்டும் காவல்துறையினர் மக்கள் ஒத்துழைத்தால் போதும் கொரோனாவின் 3 வது அலையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர்.


Advertisement
முன்னால் சென்ற சரக்கு வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதியது...3 பேர் படுகாயம்
குக்கிராமங்கள் வரை போதையால் பாதிப்பு... டாஸ்மாக் மது விற்பனையை முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும் திருமாவளவன் வலியுறித்தல்
நெல்லையிலிருந்து குமரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி... மார்த்தாண்டம் வரையில் மட்டுமே லாரியின் சி.சி.டி.வி பதிவு
சென்னை சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கும் போது போக்குவரத்தை தடை செய்ய தானியங்கி தடுப்பு அமைக்க திட்டம்
டிச.27 முதல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 48 ஆவது புத்தகக் கண்காட்சி
திட்டங்கள் விரைவாக நடக்க காரணமாக இருக்கும் ”அப்பாவுக்கு ஜே” நகைச்சுவை பேசிய அமைச்சர் கே.என்.நேரு
புல்லட் யானையின் இருப்பிடத்தை கண்டறிந்த வனத்துறை... தனியாக சுற்றிய யானை கூட்டத்தோடு சேர்ந்துள்ளது
தண்ணீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்கும் என்பதால் திருவாரூர் நகராட்சியுடன இளவங்கார்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதி... 2026 குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தி பங்கேற்க முடியும்
மத்திய கைலாஷ் சந்திப்பில் நெரிசலை குறைக்கும் விதமாக U -போக்குவரத்து தற்காலிக மாற்றம்

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement