செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.! தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்

Jul 29, 2021 06:53:38 PM

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களாக உள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவை உள்ளன. இவற்றில், கேரளாவில் மீண்டும் வகைதொகையின்றி கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மீண்டும் முழு ஊரடங்கு அமலாகும் அளவிற்கு, கேரளாவில் கொரோனா பாதிப்பு சூழல் மோசமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், நோய் தடுப்பு பணிகளில், கேரள அரசோடு, மத்திய அரசும் கைகோர்த்துள்ளது.

ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும், கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

இவ்வாறு, அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், தமிழ்நாட்டில் பெருந்தொற்று தடுப்பு பணிகள் தீவிரமடைய தொடங்கியுள்ளது.

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் சாலைகளின் சோதனைச் சாவடிகளில், சுகாதாரத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வாலையார் சோதனைச் சாவடி, தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி, தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம்மெட்டு குமுளி சோதனைச் சாவடி, கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச் சாவடி உள்ளிட்ட இடங்களில், கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள், நபர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையே, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், ஆர்டி-பிசிஆர் பெருந்தொற்று சோதனைகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகப்படுத்தியுள்ளது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement