திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடும்பப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் எனத் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சக்கரபாணி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் 5 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.
பழனி - கொடைக்கானல் பாதையைத் தேசிய நெடுஞ்சாலையில் இணைத்துத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கேரள அரசுடன் பேசிக் கொடைக்கானல் - மூணாறு சாலையைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.