செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வறுமையில் உழலும் மறைமலை அடிகளார் மகன் - அரசு உதவி செய்ய கோரிக்கை

Jul 22, 2021 09:56:34 PM

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் மகன் முதுமையில், வருவாய் இன்றி, வாடகை நிலுவைத்தொகை கூட கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.. அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை காணலாம்...

மறைமலையடிகள் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் இப்போதும் மட்டுமின்றி எப்போதும் வணங்குதற்குரியன. அந்த காலத்திலேயே தமிழ் மொழியில் கலந்திருந்த வடமொழி வார்த்தைகள் ஆதிக்கத்திற்கு எதிராக தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கியவர் மறைமலை அடிகள்.

தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல புலமை கொண்டவராக இருந்தாலுமே, தமிழின் இனிமையால் கவரப்பட்டு வேதாசலம் என்ற தனது இயற்பெயரை மறைமலை அடிகள் என மாற்றிக்கொண்டவர். தமிழுக்காக அருந்தொண்டாற்றிய மறைமலை அடிகளார் நூல்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்டு அவருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கப்பட்டது.

இவ்வளவு போற்றுதலுக்குரிய மறைமலை அடிகளாரின் மகன் மறை பச்சையப்பன், தனது முதுமை காலத்தில் வருவாய் இன்றி, வாடகை நிலுவைத்தொகை கட்டமுடியாமல் உழன்று வருகிறார். 74 வயதான மறை.பச்சையப்பனின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு 2013-ஆம் ஆண்டு குறைந்த வாடகைத் திட்டத்தில் ராயப்பேட்டை லாயிட்ஸ் காலணியில் வீடு ஒதுக்கப்பட்டது.

ஆனாலும், வேலைக்கு சென்ற இடத்தில் தவறி விழுந்த பச்சையப்பனால் கடந்த 7 வருடங்களாக வேலைக்கு செல்ல முடியாமல் போனது. வயது மூப்பு காரணமாக மறை பச்சையப்பனின் மனைவி காந்திமதி செய்து வந்த ஆசிரியர் பணியும் இல்லாததால் வருவாய் இன்றி வீடு முடங்கியது. இதனால், 5 மாத கால வீட்டு வாடகையை தரமுடியாமல், 28 ஆயிரம் ரூபாய் நிலுவை வைத்திருக்கிறார் மறை. பச்சையப்பன்

நியாயவிலை கடைகளில் கிடைக்கும் அரிசியை கொண்டும், அவர்களின் மகன் தனக்கு வரும் குறைந்த தொகுப்பூதியத்தில் தரும் பணத்தை நம்பியுமே காலம் கடத்துகின்றனர் மறை. பச்சையப்பன் - காந்திமதி தம்பதி.

முன்னதாக, 2019-ஆம் ஆண்டு பச்சையப்பன் மகனிற்கு உலக தமிழ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள நூலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டது. இந்த நிலையில், மகனிற்கு கொடுத்துள்ள வேலையை பணி நிரந்தரம் செய்யவேண்டும். அரசு குடியிருப்பிற்கு வாடகையும், நிலுவை வைத்துள்ள 28 ஆயிரம் ரூபாய் வாடகையும் அரசு தள்ளுபடி செய்யவேண்டும் என மறைமலை அடிகளாரின் மகன் மறை. பச்சையப்பன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மறைமலை அடிகளார் மகன் ஏழ்மையில் இருப்பது தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் கூறினார். 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement