செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

எம்சாண்ட் அனுமதி பெற்று ஆற்றுமணல் கடத்திய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

Jul 22, 2021 06:35:48 AM

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே எம் சாண்ட் எடுக்க அனுமதி பெற்றுச் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்திய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

கிறிஸ்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், பொட்டல் என்னும் ஊரில் ஆற்று மணல் கடத்தியது தொடர்பான வழக்கைக் காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி வழக்கை வேறு அமைப்புக்கு மாற்ற உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 27 ஆயிரம் கன மீட்டர் ஆற்றுமணல் திருடப்பட்டுள்ளதாகவும், மணல் திருடியவருக்கு 9 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு எம்சாண்ட் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

மணல் கடத்திய லாரிகளைப் பறிமுதல் செய்தபோது கையொப்பம் இல்லாத அரசின் அனுமதிச் சீட்டு கிடைத்துள்ளதையும் சுட்டிக் காட்டினர்.

அரசின் பல்வேறு துறைகளுக்குத் தொடர்புள்ளதால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டனர். வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி இடம் ஒப்படைக்கக் கல்லிடைக்குறிச்சி காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர்.

புதிதாக மணல் எடுக்க அனுமதி வழங்கினால் மணல் எடுக்கும் இடம், குவித்து வைக்கும் இடம் ஆகியவற்றில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும் என்றும், மணல் எடுக்கும் இடத்தில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement