செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Jul 18, 2021 07:15:01 PM

கோயம்புத்தூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும், பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழைப்பதிவானது.

இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்வதாக கூறியுள்ளது.

கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களில் வருகிற புதன்கிழமைக்குப் பிறகு, மழையின் தாக்கம் குறையக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளிலும், இடி மின்னலுடன், மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது

சென்னையைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், இடிமின்னலுடன், மழை பெய்யக்கூடும் என்றும், கூறப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல், தமிழ்நாட்டின் சில கடலோர பகுதிகளிலும், அரபிக்கடல் பகுதிகளிலும், மணிக்கு 60 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, வடமேற்கு வங்ககடல் பகுதியில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Advertisement
மாநாட்டுத் திடலுக்கு விஜய் வருகை
வாய்க்கால் தூர் வராததால் விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீரால் மூழ்கி அழுகும் பயிர்கள்..
மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!
இந்தியில் இருந்த விளம்பரத்தை கருப்பு பெயின்ட்டால் அடித்து அழித்த வி.சி.க.வினர்
மதுரையில் பல இடங்களில் இரவோடு இரவாக மழை நீர் அகற்றம் - முதலமைச்சர்
திருப்பதியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம் !!
திருநெல்வேலியில் மூளைச்சாவு அடைந்த காவல் நிலைய உதவி ஆயிவாளரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது ..
நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர்
உபரிநீரால் திருவண்ணாமலை சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6450 கன அடியாக உயர்வு..
திடீரென நீர்வரத்தால் காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய மாடுகள் ..

Advertisement
Posted Oct 26, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!

Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

விஜயின் வி-சாலை மாநாடு... விவேகமும், வியூகமும் வெற்றிக்கு வழிவகுக்குமா...

Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

காலை பத்தரை மணிக்கு வாயுக் கசிவால் மயக்கம்.. மாலை வரை மவுனம் ஏன் ?.. பள்ளிக்கு எதிராக போர்க்குரல்

Posted Oct 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கையில கருப்பு கயிறு “கட்ட அவிழ்த்து விடு”.. மாமியாரை குத்திய மருமகள்..! இரு கைகளிலும் கத்தியுடன் ஆக்ரோசம்...!

Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?


Advertisement