செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கேரளப் பெண் பாலியல் வன்கொடுமை - பணம் பறிக்க நாடகமா ? - தீவிரமாகும் விசாரணை

Jul 13, 2021 05:56:02 PM

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கேரளப் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம்,  பணம் பறிக்கும் நோக்கில் அரங்கேற்றப்பட்ட நாடகம் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 பழனி முருகன் கோயிலுக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி வழிபாட்டுக்காக வந்த கேரளத்தை சேர்ந்த 40 வயது பெண், 3 பேர் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து பழனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் அதை வாங்க காவல்துறையினர் மறுத்து விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

சம்மந்தப்பட்ட பெண் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலசேரி காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக டிஜிபிக்கு வாட்ஸ்அப் மூலம் வந்த புகாரின் அடிப்படையில், பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தன்ராஜ் என்ற நபர் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குக் கடிதம் அனுப்பும் அளவுக்குச் சென்றதால், விவகாரம் பூதாகரமானது. இதனையடுத்து குற்றம் நடந்ததாக கூறப்படும் அடிவாரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர், பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து, நடந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவளி பிரியா விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தேதியிலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் மற்றும் அவரது கணவர் என்று கூறப்படும் நபர் அளித்த தகவலுக்கு முரணாக உள்ளதை கண்டறிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான போலீசார் சம்மந்தப்பட்ட பெண், மற்றும் உடன் வந்த நபரை விசாரிக்க கேரளா சென்றுள்ளனர்.

இதற்கிடையே புகாரளித்த பெண்ணும் உடன் வந்த நபரும் தாய், மகன் என்ற பெயரில் அறை எடுத்துத் தங்கியதாகவும் குடிபோதையில் பணம் கேட்டு மிரட்டியதாகவும் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி, கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுக்கு அப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை என்பது கேரள மருத்துவர்களின் அறிக்கை மூலம் தெரியவந்திருப்பதாகக் கூறினார். எனவே திட்டமிட்டு பணம் பறிக்கும் நோக்கில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என்றும், கேரளா சென்றுள்ள தமிழக போலீசார் கொடுக்கும் விசாரணை அறிக்கையைப் பொறுத்து முழுமையான தகவல்கள் வெளியில் வரும் என்றும் கூறினார்.

சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நாளன்று ஊரடங்கு காரணமாக இருமாநில போக்குவரத்துக்கும் அனுமதி இல்லாத நிலையில், பழனி கோவிலும் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்படவில்லை. எனவே, இவர்கள் இருவரும் எப்படி கேரளாவிலிருந்து பழனிக்கு வந்தனர், ஏன் கோவில் தரிசனத்துக்காக வந்ததாகக் கூறினர் என்பன உள்ளிட்ட கேள்விகளின் அடிப்படையில் போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. 

 


Advertisement
பெண்ணின் கழுத்தை அறுத்து 30 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொலைகாரர்களுக்கு போலீசார் வலை
கோவையில் மான்கறியை விற்பனை செய்ய முயன்ற 2 பேரும், ரூ 4000 கொடுத்து வாங்க வந்த 3 பேரும் கைது
விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU
அதிமுகவை காட்டி பணம் வாங்கிய திருமா... திமுகவிடம் வசூலா? கொளுத்திப்போட்ட சீனிவாசன்.. அபாண்டமான அவதூறு என மறுக்கும் திருமா!
குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்
சாலையில் வழுக்கி விழுந்த சென்னை ஐ.டி பெண் ஊழியர் தலை சிதறி பலியான சோகம்..! சாலைகளை சரி செய்வது எப்போது ?
கஞ்சா போதையில் இருந்த மாணவர்களை தட்டிக்கேட்ட அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாளால் வெட்டு... மாணவன் உள்பட 2 பேர் கைது
கோவளத்தில் சி.சி.டி.வி பொருத்தப்பட்டது தெரியாமல் மீன் திருடி விற்பனை செய்து வந்த 2 திருநங்கைகள்
குரூப் - 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சி.ஐ.டி.யு பிரச்சனையால் சாம்சங் நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு வருமாறு ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேசம் அழைப்பு

Advertisement
Posted Oct 10, 2024 in இந்தியா,Big Stories,

தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

அதிமுகவை காட்டி பணம் வாங்கிய திருமா... திமுகவிடம் வசூலா? கொளுத்திப்போட்ட சீனிவாசன்.. அபாண்டமான அவதூறு என மறுக்கும் திருமா!

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்

Posted Oct 10, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...


Advertisement