தடைகளைக் கடந்து வெற்றி பெறுவது எப்படி என்பதற்கு இந்தியத் தடகள வீரர்களின் வாழ்க்கை உதாரணமாகத் திகழ்வதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரையை சேர்ந்த வீராங்கனை ரேவதி, பாட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், சிறு வயதிலேயே தனது தாய், தந்தையை இழந்த ரேவதி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் ரேவதி கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.