செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒரு பச்சைக்கிளி ரெண்டு முத்துச்சரம்… மூக்குடைந்த முகநூல் கிளி..! பிளாக் மெயிலர்ஸ் சிக்கினர்

Jul 08, 2021 11:48:30 AM

கோயம்புத்தூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், பேஸ்புக் மூலம் திருமணமானவரை காதல் வலையில் வீழ்த்தி, ரிசார்ட்டுக்கு அழைத்துச்சென்று ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாவட்டம், தடாகம் பகுதியை சேர்ந்த திருமணமான இளைஞருடன், பள்ளித்தோழி ஒருவர் முகநூலில் அறிமுகமாகியுள்ளார். 22 வயதான  அந்தப்பெண் முகநூலில் மயக்கும் விதமாக பேசி அவரை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

காதலில் மூழ்கிய இருவரும் முகநூலில் தங்களது அந்தரங்க புகைப்படங்களை பரிமாற்றம் செய்து, சாட்டிங்கில் காதல் மொழி பேசியும் வந்துள்ளனர் . அப்போது, இளைஞர் வசதியாக இருப்பதை தெரிந்து கொண்டு அவசர செலவுக்கு என்று 23,000 ரூபாயை பணத்தை அந்தப்பெண் பெற்றுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக அந்த இளம்பெண், இளைஞரை தனிமையில் சந்திப்பதற்காக ஆனைக்கட்டியில் உள்ள ஒரு ரிசார்ட்க்கு அழைத்து சென்றுள்ளார். ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கும் நிலையில், காதலியின் அழைப்பை ஏற்று உற்சாகமாக சென்ற அந்த இளைஞருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரிசார்ட்டின் படுக்கை அறைக்குள் நுழைந்த இளைஞர் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை செல்போனில் படம் எடுத்து வைத்துக் கொண்ட இரு இளைஞர்கள் அவரை மடக்கிப்பிடித்து கட்டியுள்ளனர். அந்த இருவருடன் சேர்ந்து இளம் பெண்ணும் முகநூல் காதலனை அடித்து உதைத்து அவனிடம் இருந்த பணத்தை பறித்துள்ளார்.

இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை காட்டி, மேலும் சில லட்சங்கள் கேட்டு மிரட்டிய அந்த கும்பல், பணம் வராவிட்டால் படத்தை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவோம் என்று கூறியுள்ளனர். இதனால் மிரண்டு போன அந்த இளைஞர் இரண்டு நாள் கழித்து பணம் கொடுப்பதாக கூறி வீடு திரும்பியுள்ளார்.

ரிசார்ட் அறையில் தனக்கு நடந்த கொடுமை குறித்தும், பிளாக் மெயில் குறித்தும் தடாகம் காவல் நிலையத்தில் அந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பணம் பறித்த அந்தப் பெண்ணையும், அந்த பெண்ணின் கூட்டாளிகள் இருவரையும் பணம் தருவதாக கூறி அழைத்த காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்தனர்.

விசாரணையின் முடிவில் அந்த பெண்ணின் பெயரையும் பாதிக்கப்பட்ட முகநூல் காதலனின் பெயரையும் வெளியிட மறுத்த காவல்துறையினர் கூட்டாளிகளான 25 வயது அப்துல்கலாம் மற்றும் 23 வயதான ஆபீப் அலி ஆகிய இருவரின் பெயர்களுடன் அவர்களது புகைபடங்களையும் வெளியிட்டனர்.

3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முகநூலில் பழகி பணம் கேட்டு மிரட்டும் பெண்கள் குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்திலும், 77081-00100, 94981-81212 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் வீட்டில் மனைவி இருக்கும் போது, முகநூலில் துணையை தேடும் மன்மதர்களுக்கு எந்த மாதியான வினை ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement