பாலியல் புகாரில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த் துறை HOD பால் சந்திரமோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
HOD பால் சந்திர மோகன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், சமூக நல அலுவலர் என 7 பேரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் பரிந்துரையின் பேரிலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும் திருச்சி மாநகர காவல்துறையினர் புகார் கூறிய மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதில், பால் சந்திர மோகன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் அவனை கைது செய்துள்ளனர்.