திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீதான பாலியல் புகார் விவகாரத்தில் புகாரளித்த 5 மாணவிகளிடமும் இரண்டாவது நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பிஷப் ஹூபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது.
அவர்களைத் தொடர்ந்து மாநகர போலீசார் விசாரணையில் களமிறங்கினர். நேற்று முதல் மாணவிகளிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ள கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், அவர்களது புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.