செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மேகதாது திட்டம் கைவிடக் கோரி எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Jul 04, 2021 06:19:49 PM

காவிரியில் மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்திக்  கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

காவிரியில் மேகதாது அணை கட்டத் தமிழகம் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என வலியுறுத்தி எடியூரப்பா எழுதிய கடிதத்துக்கு மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், மேகதாதில் 67 டிஎம்சி கொள்ளளவுள்ள அணை கட்டும் திட்டத்தையும், பவானி ஆற்றில் இரு நீர் மின்திட்டங்களைத் தமிழகம் செயல்படுத்துவதையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் இரு நீர்மின் திட்டங்களும் குடிநீருக்கும் பாசனத்துக்கும் நீர் கிடைப்பதைப் பாதிக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கபினி அணைக்குக் கீழுள்ள கபினி வடிநிலப்பகுதி, கிருஷ்ணராஜசாகர் அணைக்குக் கீழுள்ள காவிரி வடிநிலப்பகுதி, சிம்சா, ஆர்க்காவதி, சுவர்ணாவதி வடிநிலப்பகுதி ஆகியவற்றில் இருந்து தமிழகம் நோக்கி வரும் தடையற்ற நீரோட்டத்தைத் தடுத்துத் திசை திருப்பும் வகையில் மேகதாது அணைத் திட்டம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மேகதாது திட்டத்தைச் செயல்படுத்துவது தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதிக்காது எனக் கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரின் குடிநீர்த் தேவைக்கு நீர் எடுக்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளதே மேகதாது அணை கட்டுவதற்கான காரணம் எனக் கூறினாலும், இந்தத் திட்டம் பெங்களூரில் இருந்து நெடுந்தொலைவில் இருப்பதால் அது சரியாகாது எனத் தெரிவித்துள்ளார்.

பெங்களூருக்குக் குடிநீர் எடுப்பதற்கான கட்டமைப்பு ஏற்கெனவே உள்ள நிலையில், நாலே முக்கால் டிஎம்சி நீர் எடுக்க 67 டிஎம்சி கொள்ளளவுள்ள அணை கட்ட வேண்டியுள்ளதாகக் கூறுவதையும் ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது தமிழ்நாட்டின் பங்காக உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள நீரின் அளவு, திறமையாக முழுவதும் பயன்படுத்தும் அளவுக்கு மட்டுமே உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

நீர்ப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தப் பழைய கட்டமைப்புகளை நவீனப்படுத்தவும், மேம்படுத்தவும் வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பணிகள் முடியும் வரை உச்சநீதிமன்றம் நிர்ணயித்த அளவு நீரில் தமிழகத்தின் தேவையை நிறைவு செய்ய முடியாது என்பதால் மேற்கண்ட உண்மைகளையும், இவற்றில் உள்ள சிக்கல்களையும் கருதி மேகதாது திட்டத்தைத் தொடர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement