செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பிறந்ததும் இறந்ததாய் கூறப்பட்ட குழந்தை மயானத்தில் உயிர்த்தெழுந்த மாயம்..!

Jul 04, 2021 08:32:52 PM

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களால் இறந்துவிட்டதாகக் கூறி பெற்றோரிடம் கொடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை மயானத்துக்கு எடுத்துச் சென்று புதைக்கும் நேரத்தில் உயிருடன் இருப்பது தெரியவந்து பெற்றோரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர்கள் பிலவேந்திரராஜா - பாத்திமாமேரி தம்பதி. ஏற்கனவே இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3வதாக கர்ப்பம் தரித்துள்ளார் பாத்திமாமேரி.

ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த பாத்திமாமேரிக்கு சனிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்தது. உடனடியாக அவரை உறவினர்கள் வாகனம் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நள்ளிரவு 12.30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு அதிகாலை 3.30 மணிக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், 700 கிராம் மட்டுமே இருந்த அந்த குழந்தை சுவாசப் பிரச்சனையால் பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்து விட்டதாகவும் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை நடைமுறைகளுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு முப்பது மணிக்கு இறப்பு தொடர்பான ஆவணங்களுடன் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு பிலவேந்திரராஜாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

மயானத்தில் ஏற்கனவே தோண்டப்பட்டு தயார் நிலையில் இருந்த குழிக்குள் புதைப்பதற்காக தூக்கியபோது குழந்தையின் உடலில் அசைவு காணப்பட்டுள்ளது.

குழந்தை உயிருடன் இருப்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சி கொண்ட பெற்றோரும் உறவினர்களும் மீண்டும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையுடன் ஓடினர். வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

குறைமாதத்தில் பிறந்து, மூச்சு விடாமல் இருந்த குழந்தையை சரியாக பரிசோதிக்காமல் இறந்துவிட்டதாக தவறாக கருதிவிட்டனர் என்றும் சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் மருத்துவமனையின் தலைவர் பாலாஜிநாதன் கூறினார்.


Advertisement
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement