செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அரிவாளை எடுத்து அதிகாரிகளை வெட்ட பாய்ந்த அறியான்..!

Jul 02, 2021 01:52:55 PM

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த புத்தூர் வயல் பகுதியில் வசிக்கின்ற ஆதிவாசி மக்களின் குழந்தைகள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களை சிகிச்சைக்காக அழைத்துச்செல்ல சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் பெரியவர் ஒருவர் அரிவாளை எடுத்துக் கொண்டு வெட்டுவதற்கு விரட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.... 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த புத்தூர் வயல் பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 5 வயது முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் சளி காரணமாக நடத்தப்பட்ட முதல் கட்ட பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அந்தகிராமத்துக்கு விரைந்த மாவட்ட சுகாதாரத்துறையினர் நகராட்சி ஆணையர் பாஸ்கரன் தலைமையில் அந்த பகுதிக்கு சென்று கிருமிநாசினி தெளிப்பதற்கும் குழந்தைகளை மருத்துவத்துவ மனைக்கு அழைத்து செல்லவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஊருக்குள் நுழைந்தனர். ஊரின் எல்லையில் கையில் அரிவாளுடன் நின்றிருந்த பெயரியவர் ஒருவர் கொரோனாவின் தீவிரத்தை அறியாமல் அங்கு வந்த அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து தலையை வெட்டி விடுவேன் என்று விரட்ட ஆரம்பித்தார்

அப்பகுதி மக்களும் தங்கள் குழந்தைகளுக்கு எதுவும் கிடையாது என்றும் ஊருக்குள் வர வேண்டாம் என்றும் அரிவாள், இரும்பு கம்பி, கட்டைகளை வைத்து அவர்களை மிரட்டி ஊருக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.

இதையடுத்து கூடலூர் டிஎஸ்பி சசிகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் பேச்சுவார்த்தை உடன்படவில்லை. இப்பகுதியில் ஆதிவாசிகளுக்கு என்று செயல்பட்டு வரும் தனி மருத்துவமனை அதிகாரிகளை அழைத்து கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றும் அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை சிகிச்சைக்கு அனுப்ப முடியாது என திட்டவட்டமாக கூறியதையடுத்து அதிகாரிகள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனால் ஆதிவாசி கிராமங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement