செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஐ.ஓ.பி வங்கிக்கு கட்ட வேண்டியது ரூ.50.16 கோடி... ஒரே செட்டில்மென்டில் 29 கோடி செலுத்தியது சக்தி சுகர்ஸ்... 21 கோடி தள்ளுபடி..!

Jul 01, 2021 05:13:11 PM

சுமார் 50.16 கோடி கடனுக்கு பதிலாக ஒரே சமயத்தில் 29 கோடி ரூபாய் கொடுத்து இந்தியன் ஓவர்சிஸ் வங்கியிலுள்ள தன் கடனை சக்தி சுகர்ஸ் நிறுவனம் தீர்த்துள்ளது.

கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சக்தி சுகர்ஸ் நிறுவனத்துக்கு தமிழகத்தில் 3 ஒடிசாவில் ஒன்று என 4 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனம், இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் கடன் வாங்கியிருந்தது . 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியின்படி, சக்தி சுகர்ஸ் நிறுவனம் முதலும் வட்டியுமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 50.16 கோடி செலுத்த வேண்டும். ஒன் டைம் செட்டில்மென்டாக 29 கோடி செலுத்தினால் மீதி பணத்தை தள்ளுபடி செய்து கொள்ள முடியும். இதனால், ஜூன் 29 ஆம் தேதி சக்தி சுகர்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் 28.90 கோடி கொடுத்து கடனை தீர்த்துள்ளது.

தொடர்ந்து, சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் மீது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் கொடுத்த புகாரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாபஸ் பெற்றுள்ளது. OTS எனப்படும் ஒரே டைம் செட்டில்மென்ட்டாக சாமானியன் கடன் கட்டி முடித்தால் CIBIL ஸ்கோர் குறைந்து மீண்டும் எந்த வங்கியிலும் கடன் வாங்கும் தகுதியை இழந்துவிட்டார் என்று கூறுகிறார்கள். CBIL ஸ்கோர் என்பது சாதாரண மக்களுக்கு மட்டும்தானா அல்லது பெரும் நிறுவனங்களுக்கும் பொருந்துமா என்கிற கேள்வியும் இந்த சூழலில் எழுகிறது.

இது குறித்து, வங்கி துறை சார்ந்த நிபுணர்கிளடத் விசாரித்த போது, சாதாரண மனிதர்கள் ஒன்டைம் செட்டில்மென்ட் செய்தால், சிபில் பாதிக்கப்படுவது போல நிறுவனங்களின் சிபில் ஸ்கோரும் பாதிக்கப்படும். ஒன்டைம் செட்டில்மென்ட் என்கிற ரீதியில் வங்கியும், வாடிக்கையாளரும் ஒரு வித சமரசத்தை எட்டுவதுதான் இதன் நோக்கம்.

இதனால், சக்தி சுகர்ஸ் நிறுவனம் மீதியுள்ள 21 கோடியை கட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆனாலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் இனிமேல் பிற வங்கிகளிடம் இருந்து கடன் பெற முடியாது. அதே வேளையில்,தனியார் நிறுவனங்களுக்கு கடன் பெறுவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. இதனால், தனிநபர்கள் பாதிக்கப்படுவது போல பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்படாது என்கின்றனர்.


Advertisement
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement