செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சாலையோரம் விற்கப்படும் "சிம்" கார்டுகள்..! விலை கொடுத்து வாங்கப்படும் ஆபத்தா ?

Jul 01, 2021 01:03:19 PM

சாலையோரங்களில் விற்கப்படும் சிம்கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் பெயரில் போலி சிம் கார்டுகள் தீவிரவாத செயலுக்கும், சைபர் குற்றங்களுக்கும் சப்ளை செய்யப்படுவதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு களியகாவிளை சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்ற தீவிரவாத கும்பலுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான சிம் கார்டுகள் போலி முகவரி மூலம் சப்ளை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது.

தமிழக க்யூ பிரிவு காவல் துறை கண்டுபிடித்த இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. தீவிரவாதிகள் பயன்படுத்திய சிம்கார்டுகள் சாலையோர சிம்கார்டு விற்பவர்களிடம் சிம் கார்டு வாங்கியவர்களின் பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சாலையோரங்களில் விற்கப்படும் சிம்கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி பல சிம் கார்டுகள் வாங்கப்பட்டு இது போன்ற தீவிரவாத கும்பலுக்கும், ஆன்லைன் வங்கி மோசடி போன்ற குற்றங்களில் ஈடுபடும் கும்பலுக்கும் சப்ளை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகிறது.

தொலை தொடர்பு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களிடம் சிம் கார்டுகளை வாங்காமல், சாலையோரங்களில் விற்கும் கும்பலிடம் வாங்கும் வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுவதாக அனைத்திந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். 

அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளரை அதிகபடுத்துவதற்காக பல சலுகைகளை அறிவித்து ஊழியர்கள் மூலம் சிம்கார்டுகளை அதிக எண்ணிக்கையில் விற்க நிர்பந்திக்கின்றன.

சில சிம்கார்டு விநியோகஸ்தர்களும் தங்களது ஊழியர்கள் மூலம் சாலையோரங்களில் சிம்கார்டுகளை விற்பனை செய்கின்றனர். இவர்களிடம் சிம்கார்டுகளை வாடிக்கையாளர் வாங்கும் போது தங்களது ஆதார் போன்ற ஆவணங்களை வழங்குவதாகவும், அந்த ஆதார் எண்களை வைத்து அவரது பெயரிலேயே ஊழியர் மற்றொரு சிம்கார்டு பெற்று அதை விற்பனை செய்வதாகவும் காவல் துறையிடம் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளனர்.


Advertisement
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement